Search This Blog

Tuesday, December 05, 2006

அறியாத அறிவாளிகள்








நினைத்தாலே கண்கள் மட்டுமல்ல என்
பேனாவும்
கண்ணீர் சிந்தும் நிகழ்ச்சி அது. நீ வீடு காலி செய்து
பக்கத்து
டவுனுக்கு பயணப்பட்ட நேரம், பள்ளிவிடுமுறை
நாளான போதும்கூட நண்பர்கள் உடன்
அரட்டை அடிக்க
ஆற்றங்கறை சென்றிடாமல், அத்தனை தட்டுமுட்டுச்
சாமான்களுடன்,
நீயும் ஏறும்வரை கண்கள் கலங்கிட
காத்திருந்தேன். உன் அப்பா கொடுத்த ஜ்ம்பது
ரூபாயை


வாங்க மறுத்த என் கைகள், நீ
கொடுத்த ஜந்துரூபாயை


அழுதகண்ணோடு வாங்கி
கொன்டேன.இன்னமும் உன்


கைரேகை அழியாமல் உறையிட்டு
பத்திரப்படுத்தி வருகிறேன்.




நீ பெரியவளாகிவிட்டாய் என்று விசேஷ
அழைப்பு


வீட்டுக்கு வர, அம்மாவிடம்
ஆயிரம்முறை


விசாரித்திருக்கிறேன்
உன்னைப்பற்றி.


எத்தனையோ தடைகளுக்குப் பிறகு உன்னை,


உன்வீட்டில் சந்தித்திட உன்
அண்ணனின்


திருமனநிச்சயம் வழிசெய்தது.வீட்டில்


அத்தனையும் புதியமுகங்களாயின
உன்னைத்தவிர.


யாரிடமும் விசாரிக்க மணம்இன்றி
உன்னைத்தேடி


அலைந்த விழிகள் இதயத்தை
இரும்பாக்கியது.




நான் உன்னைத்தேடி வருவேன் என


அறிந்தவள் போலே-கரைஒதுங்கிய
வெண்சங்காய்,


மாமரத்தின் கீழே கிடந்த இலைகளை
கிள்ளி


எறிந்தவாறே தலைகுனிந்தபடி இமைகள்
விரித்தாய்.




விண்மீன்களை எண்ணி சொல்லச்சொல்லி
இருந்தால்


கணநொடியில் எண்ணி சொல்லி
இருப்பேன்.ஆனால்


நான் பேச வந்த வார்த்தைகள்,அதை
எவ்வளவு என


எழுதினால் யுகங்கள் பல
வேண்டும்.எழுதிட, கடல்நீரே!


"மை" ஆனாலும் கூட போதுமா என்பது
சந்தேகமே!.


ஆனால் அத்தனை வார்த்தையும்
இரண்டு


நிமிட மெளனத்தில்
இடம்மாறின.




எப்படியோ!! உன்னைப்பற்றி வருகின்ற
செய்திகளை


மட்டுமே என்காதுகள் கேட்பது போல,
மற்றன எதையுமே


கேளாமல்-நீ படித்திடும் பள்ளியில்
சேர ஆசைப்பட்டேன்.


என்ன செய்ய நான் "ஆடவன்" ஆனதால்
உன்னுடன்


சேர்ந்து படிக்க இயலாது உன்னை
மட்டுமே


படித்தேன் பள்ளிவாசல்களில்
காத்திருந்து.




உன் அண்ணன் அயல்நாடு சென்றிட,
உன்னையும்


அயல்நாட்டிற்கு அழைத்திட, அவன்
நண்பனை உன்னை-


கேட்காமலையே உறுதி செய்யத்
தொடங்கினார்கள்.


இந்த விசயம் அறிந்த நீயோ படிப்பினை
தவிர்த்தாய்.


நானோ விசயம் அறிந்து
துடித்தேன்.


நீயோ விஷத்தை
கையிலெடுத்தாய்.


என் உயிர் கெட்டியோ என்னவோ


உனக்கு ஒன்றும் ஆகிடவில்லை அன்று.




என் அம்மா-அப்பா எவ்வளவோ
சொல்லியும்


கேட்காமல் உன்னைத்தேடி உன்
இல்லம் வந்த


நான் அசிங்கப்படுத்தப்பட்டேன்
உன்பெற்றோர்களால்.


நீ மண்டியிட்டு கேட்டும்
மசியாத உன்பெற்றோர்கள்,


கையில் அட்சதைக்குப் பதிலாய் உயிர்
மாய்த்திடும்


வழியில் விஷம் கையிலெடுக்க,
விதியை நொந்து


நீ சொன்ன சொல் எல்லாம்
தானே


இன்றைய என்
செல்வங்கள்.




திருமணம் ஆகியும் உன் மனம்
மாறவில்லை.


பணம் பலகண்டும் என்னுடைய
காதல்மனமும்


மாறவில்லை.!


"இன்னமும்
காதலிக்கிறேன்-


உன்னைப் போலவே
நானும்,"


அந்த ஜந்து ருபாய் தாளை
தடவியவண்ணம்.


உன்னை
மணக்காததால்!!


நானோ கல்யாணம் ஆகாத
பிரம்மச்சாரி. நீயோ


மணமாகியும் மங்கலம் சூடிடாத
நெற்றிக்காரி-


திலகம் நான் இடாததால்.




நீ குங்குமம் சூடிடாதற்கு மதம்
காரணமாம்.


நான் மணம் கொள்ளாதற்கு ஜாதகம்
காரணமாம்.


காதலை அறியாத
அறிவாளிகளுக்கு.

Wednesday, November 29, 2006

கா(கல்)தல் மனம்




சின்னஞ்சிறு வயது முதலே நீ தானே என்ன்னுடைய பாதி.
அம்மா ஆசையாய்
தந்த அதிரசம்,

அம்மாவுக்காக பாதி
தின்று மீதிபாதி உனக்கு தந்தேன்.ஆனால்
மீதிப்பாதியில்
பாதி எனக்கு தந்து தலைகோதினாய்.

நானோ

எச்சில் கசக்குதோ
என்றேன் நக்கலாய்.

கோபமாய் சிரிப்பாய்.


நீ சாப்பிடாமல் முழுதாய் கொன்டுவந்ததை
முழுதாய் தின்றுவிட்டு
மண்டையில் கொட்டினேன்,ஏன்!?
இன்னொன்று
கொண்டுவரவில்லை என!



பள்ளியில் அனைவரும் சுற்றுலா செல்ல பணம்

தர மறுத்த
தந்தையை உன்னிடம் திட்டிய கணங்களில்
நீ தான் பணம் கொடுத்தாய் கட்டிடச்
சொல்லி.

அப்பா
ஏது பணம் எனக்கேட்டால் சொல்லிட, காரணமும் கற்பித்தாய்சிறுசேமிப்பை
சுட்டிக்காட்டி.


பேருந்தில் என் அருகில் இருந்த காலி இடத்தை
கண்கொட்ட பார்த்திருந்தாய். உன் அருகில் இடம்
காலியாயிருக்க வேகமாய்
வந்தமர்ந்திட,

அன்று
அகிலாண்டம் டீச்சர் அடித்த பிரம்படியால் எத்தனை
நாட்கள்உன்பிஞ்சு கைகளால்
வருடிக் கொடுத்திருப்பாய்.


நீ மகளிர்
பள்ளிக்கு சென்றிட என்னுள் ஒரே சந்தோசம்.
உன் பேர் சொல்லி தினம் தினம் பல
பெண்களை
ஓரக்கண்ணால் கற்பழித்திருக்கிறேன்.அதை
உன்னிடம் சொல்லியபோதெல்லாம்
முதுகில்
வேகமாய் தட்டினாய்.

நானோ நீ செல்லமாய்
தட்டி ரசிப்பதாய்
நினைத்திருந்தேன்.


கவர்ச்சி என புகைப்பிடித்திட கன்னத்தில் அறைந்து
பிடுங்கி எறிந்தாய் தரையில்.

கோபத்தில் திருப்பி
அடித்தேன் அப்போதும்
சிரித்தாய்.மன்னிப்பு கேட்டிட,

குடிக்கமாட்டேன் என உறுதி
கூறியதால் உத்தரவு
தந்தாய்.


வேலை கிடைத்து பார்ட்டி என்ற பெயரில் மது அருந்திட,
நீ அறிந்து வந்து கண்கள் கலங்கி சிவந்திருக்க
குடிக்காதே என்றாய்.ஆனால்

நானோ வழக்கம் போல
நீ என்ன சரக்கு அடிச்சே! உன்கண்கள்
இப்படி சிவந்திருக்கு என்றேன்.


உலர்ந்த புன்னகை உதிர்த்து குடிக்காதே என்றாய்.
அப்போதும் கூட ஓ!! நீ அவ்வளவு அனுபவசாலி ஆயிட்டியோன்னு அதட்டலோடு
ம் ம்ம் எவ்வளவு குடிக்கிறாய்!
எவ்வளவு காலமாய் குடிக்கிறாய்?என்றேன்

.
நீ கோபப் பார்வை வீசிட சுருண்ட என்
முகம் கண்டு சரி எப்போதாவது ஒருமுறை குடி என அனுமதி தந்தாய்.


அப்படியான
ஒருநாளில் மதுவுடன் மாதுவும் இணைந்திட சந்தோசத்தின் உச்சியில் ஊரான்
சொல்லும்முன் ஓடிவந்து உன்னிடம் தான் சொன்னேன் உற்சாகத்தோடு.


உதறித்தள்ளி தலையை கவிழ்ந்து கொணடு
"பாதுகாப்போடு தானே" என்றாய் குரல்
குழைந்தபடி.ஆனால்
நானோ பின்மன்டையில்
தட்டி வெட்கத்தைப் பாரு புள்ளைக்கு என்றேன்.


அன்றைக்கு தெரியவில்லை இந்த மரமண்டைக்கு
நீ அழுதுகொண்டிருக்கிறாய் என்று.



வேலை காரணமாய் வெளிநாடு சென்றிட,
விட்ட அனைத்தும் தொடர்ந்திட உன்னிடம் ஓடி வரும்
நாளுக்காய் காத்திருந்து, ஓடி வந்தேன்
ஒருநாள் உன் வீட்டுக்கு மூச்சிரைக்க!


எப்படி இருக்கிறாய் என்றேன்?பதில் சொல்லாமல்,
நீ எப்படி இருக்கிறாய்?
என்றாய். நல்லா இருக்கேன்.
உன்கிட்ட நிறைய சொல்லனும் என்றேன். ஆனால்
நீயோ என்னிடம் ஒன்னே ஒன்னு சொல்லனும் என்றாய்.

முதன்முதலாய் உன்னை முதலில் சொல்ல
சொல்லி காத்திருந்தேன்.
மெளனமே காத்தாய்.நான் உன்னை உலுக்கி சீண்டிட
உன் அறைப்பக்கம் வந்த உன் தம்பிதான் சொன்னான் .மாப்பிள்ளை இன்னும் பத்து
நிமிடத்தில் வர இருப்பதாய்.

ஆனந்தத்தோடுதான் கைகுழுக்கினேன்

"வாழ்த்துக்கள்" என்று.
சரி நீ சொல்லு எவ்வளவோ சொல்லணும்னு
சொன்னியே!

இப்போ சொல்லுறியா இல்ல
சாயங்காலம் சொல்லுறியா என்றாய் ஏக்கத்தோடு.

எவ்வளவோ சொல்ல வந்த எனக்கு
எதுவுமே சொல்ல வராமல் வேகமாய் வீடு

திரும்பியதும் அழுகைதான் வந்தது
அடக்கமுடியாத அளவுக்கு ஆறாக.


ஏன் அழுகிறேன் என யோசித்தபோது தான்
உணர்ந்தேன்,நீ இப்படி

எத்தனை முறை அழுதிருப்பாய் என்று.போதும் . இனியும்
நீ, என்னால் அழுதிடவேண்டாம் இன்னொருமுறை
.அதனால் தான் கண்ணீர் விட்டு
கதறியதை கூட காகிதத்தில்

கல்லறையாக்குகிறேன்
காத(க)ல்மனதோடு.

Saturday, October 28, 2006

மையால் மெளனமான மனம்


























  1. நீ காற்றானதால் நான் உன்னை
    மட்டுமே
    சுவாசிக்கும்
    புல்லாங்குழலாய்.


    வானமும்
    வறுமையில்!
    நிலவில்
    பாதியை காணவில்லை!

    உன்
    நினைவுகளில் என்னை
    உருக்கிக் கொண்டு- காதல் என்னும்
    வெளிச்சத்தில் கனவு
    என்னும்
    இருட்டிலேயே!மெழுகுவர்த்தியாய்.


    சிரிப்பிலே உண்மை எது?
    குழப்பத்தில் நான்.
    பைத்தியம்
    கண்டு சமுதாயமா?
    சமுதாயம் கண்டு பைத்தியமா?

    தீக்குச்சிகள்!முடிந்தவரை இருட்டோடு
    போராடும் போராளிகள்.

    புற்களை கிள்ள கிள்ள
    கிளர்ந்தெழுகிறதே!
    மண் மேல் காதலோ!


    உன்னை தேவதை என்றதால்
    தேவதாஸ் ஆனவன் நான்

    பாலையிலே ஒரு சோலை!
    கனியோடும் மலரோடும்
    கள்ளியும் கற்றாழையும்
    கைகோர்த்தபடி!

    வாழ்வை மற்றவர்களுக்காவே
    வாழும் தியாகி
    விருப்பம் இல்லையெனினும் மற்றவன்
    பொருளையும் விழுங்கிடும் கயவாளி

    இரவு நேர உழைப்பின் களைப்போ
    புற்களுக்குபனித்துளிகள் வியர்வையாய்


Friday, October 20, 2006

தென்னை சொன்ன செய்தி

மண்ணில் மறைத்து வைத்தேன் ஒருநாளில்
மழையில் மலர்ந்து- வளர்ந்து நின்றது
பின்நாளில்


பாலையோடு பூத்து குலுங்கினாய் பற்கள் பலகாட்டி
உன்னை ருசித்திட
எங்களுக்குள்ளே போட்டி


இளநீர் தந்து எங்கள் சோர்வை துடைத்தாய்
நற்காய்கள் தந்து உணவில்
ருசி கூட்டினாய்


காய்ந்ததால் பணம் தரும் எண்ணெய் ஆனாய்
கீற்றோலை தந்து குடிசையின்
குறை மறைத்தாய் கூரையாய்
பாலை தந்து விறகானாய்
பழுத்ததால் பரிமாணம்
கண்டாய்
விழுந்ததினால் வீட்டினில் விட்டம் ஆனாய்


இப்படிவிழும் வரையில் தவனைமுறையில் தருகின்றனவே
தண்ணீரை வட்டியோடு
தென்னைகள்.



தென்னைகளேஉங்களிடம் இல்லையோ
ஏமாற்றிச் செல்லும் குணம்.ஆகவே
ஆரம்பிக்கப்படுமா?


சீட்டுக்கம்பெனிகள் தென்னைமரங்களால்!
சிதறிச் சென்ற
சிறுசேமிப்பை சீர்படுத்திட!

Wednesday, October 11, 2006

புலம்பல்கள் கிறுக்கல்களாய்

வலையில் தப்பிய மீன்கள்
மாட்டிக்ககொண்டது தூண்டிலில்.

பசிக்காக மீன்கள்,மீன்களுக்காக தண்ணீர் என‌

நீரோடும் யுத்தம் மனிதனால்.

தாவரங்களில் உண்டோ உயர்வு தாழ்வு

அங்கும் காதல் தோல்வி.ஆம்

தாவரங்களும் தாடி வளர்க்கின்றன.

சில‌தரையின் உள்ளே!சில வெளியே!

விடியலுக்காக காத்திருக்கிறான்

விவசாயி தினமும்.யாருக்கோஎன்றோ!

எங்கோ அரிசியாகப் போகும்

விளைச்சலை வளர்த்திட பசியோடு!!

நீ கன்னி என‍ உன் நிழல்

மிதித்து,வ‌ட‌ம் பிடித்து வ‌ந்த‌டைந்தேன்

உன் வாச‌ல் வ‌ரை.

அப்பா என்ற‌து என்குழ‌ந்தை

இய‌ற்கை இட்ட‌ சாப‌மோ

அருவிக‌ள்

அழுதுகொண்டே ஆயுள் முழுதும்.


உன் கால் ப‌திந்த‌ முள் கூட‌

வெட்க‌த்தில் முக‌ம்(னை) சிவ‌ந்து.


கோழையின் முயற்சி கூட

வெற்றி தான் தற்கொலை


மனிதனின் முதல் தேடல் மரணம்

தேடல் கிடைத்ததில்

தொலைந்தவன்

உயிர் கொள்கிறான்.கல்லரையாக.

தழுவல்




மை இட்டு கவி எழுதி

பொய் சொல்லி உனை தழுவி

மெய்யாய் ஏங்கி நின்றேன்

அடுத்தமுறை தழுவலுக்காக.

Wednesday, October 04, 2006

வ‌டுவான‌ நினைவுக‌ள்



விரும்பி வாங்கிய விளையாட்டுப் பொருளை

தம்பி விளையாடிட கேட்டும் விட்டுக் கொடுத்ததில்லை

இதோ இன்றும் என்னிடம் ப‌த்திரமாக‌.


அண்ணன் விளையாடிட போகாதே என விரட்டியதுண்டு

விட்டதில்லை நான் விளையாட்டினை.

இதோ இன்றும்நான் விளையாட்டுப் பிள்ளை.


அம்மாவும் ஏசியதுண்டு எல்லோரிடமும் பழகாதேஎன‌

பழகியவர்களில் பலர் கயவர்களாய். இதோ

இன்று பக்குவப்பட்டவனாக பலரின் முன்னே.


அப்பாவும் அடித்ததுண்டு புகை பிடித்ததற்கு

விட்டுக்கொடுத்ததில்லை புகைப் பிடிப்பதை.

மாறாக அப்பா தான் விட்டுக்கொடுத்தார் அடிப்பதை.


கும்மாளம் போட குடித்தவேளைகளில் எல்லாம்

குருவும் கண்டித்தார்.விட்டதில்லை குடியை.

குரு விட்டுவிட்டார் கண்டிப்பதை.


அறிந்த அனைவரும் அடித்து சொல்லியும்

கெஞ்சிக்கேட்டும் விட்டுக்கொடுக்காத நான்.

உன்ஒருத்திக்கு பிடிக்காததாலே விட்டேனடி

குடி,புகை தவிர பெண்களையும்.


ஆனந்தமாய் இருந்ததுண்டு இலட்சியம் அடைந்ததாய்

நினைத்ததுண்டு உன்னை நெருங்கியதாய்.


பின்பு தான் உண‌ர்ந்தேன் நெருங்கிய‌து உன்னை அல்ல‌

தோல்வியை என்று.ஆம் உன‌க்காக நம் காத‌லுக்காக‌

என் குண‌ம் மாற்றிக் கொண்டேன் நீயோ ம‌ன‌ம்

கொண்டு மறந்திடச் சொல்லி ம‌ன்னிப்பு கேட்கிறாய்.


நீ சொல்லி நான் செய்யாத‌ ஒன்று ஏது உல‌கில்!

ம‌ற‌ந்திட‌ எண்ணி ம‌றுப‌டி ம‌துவும் புகையும்

எடுத்துவிட்டேன்,ஆனாலும் கூட‌ குடிக்க‌ முடிய‌வில்லைய‌டி


என்ன‌ செய்ய‌!!என்னுடைய‌ இதயமும் என்னிட‌ம் இல்லை

இருக்கும் உன் இத‌ய‌மும் கூட‌ என்சொல்
கேட்ப‌தில்லை.

நீ சொல்லிய‌ வார்த்தைக‌ள் ம‌ட்டும் ஓயாம‌ல்
கேட்டுக்கொன்டே

கடலே! உனக்கோர் எச்சரிக்கை




ஏய்! கடலே ஆனந்ததில் அலைகளை
அடிக்கடி அனுப்பிவைக்காதே
கரைக்கு.நீ

அன்று அள்ளிச் சென்ற
எங்களின் கண்களுக்கு

இன்று ஆண்டு
ஒன்று . இன்று

சபதம் கொள்கிறோம்.
மீன்களை

உண்ணுவதில்லை என. நீ
அள்ளிச் சென்ற

கண்களாகிய மீன்கள்
உன்னை முழுதும் குடித்து

கட்டாந்தரையாக காட்சிஅளிக்கப்போகிறாய்..
அன்று நீ அறியகூடும்அகிலத்துடன்.
மனிதனுக்கும் மீன்களுக்கும் உன்டான உறவு
பற்றி.

Friday, September 29, 2006


பஞ்சபூதங்களில் ஒரு ரவுடியாய்

ராட்சத அலை எடுக்கப்படுமா?
ENCOUNTER

கடல் நீரா?இல்லை கண்ணீரா?


    • இன்று முதல் கடலின் ஆழம்
      இருமடங்கானது. அலையில் அலறி
      உயிர்விட்டவர் கண்ணீருடன், கண்கள், காதுகள்
      மற்றும் மனம் கொண்டவர்களின் கண்ணீராலும்

சுனாமிச் சிதறல்கள்

26.12.2004 விடியற்காலை இது
எத்தனையோ பேருக்கு விடியாத காலை.

கதிரவன் வரவை கண்டிட காத்திருந்த கண்கள்,

காற்றுடன் அலையின்ரீங்காரம் ரசித்திருந்த காதுகள்,
இளங்காற்றை எதிர்த்து ஓடி இளைப்பாறியஇதயங்கள்,

நண்டுகளை அலையுடன் துரத்தி விளையாடிய மழலைகள்,
இரவுநேர உணவுக்காக வலைவீசி கலமேறிய மீனவர்கள்,
கடலை தொட்டியாய்நினைத்து குளித்திடும் கடற்கரைவாசிகள்,
காதலை வாழவைக்க பலசமயம் மறைக்க
உதவிய படகுகள்,
எரிகிற கதிரவன் முன்னே எரியாத அடுப்போடு போராடும்தள்ளுவண்டிக்காரன்- என இவைகளோடு அன்றி
அன்று தான் அப்பாவுடன் புதிதாக வந்த அந்த குழந்தையும் கேட்டது மகிழ்வுடன்
இதுபோல விடியல் தினம் வேண்டுமென!!
மகிழ்ச்சிமுடியுமுன்னே மடித்து
அடித்துச்சென்றாயே
அலைகளை அனுப்பி. எங்களின் கண்ணீர் அலைகளோடு
இல்லையில்லை- எங்களின் கண்ணீரோடு ஒப்பாரி
வைக்கிறோம் வேண்டாம் இப்படி ஒரு
விடியல் என..
அதுமட்டுமல்ல இனி எங்களுக்கு கண்ணீரால்
வரும் அலை கூட
வேண்டாம்.

உப்பானது ஏன்?


கடல்நீர் உப்பானது ஏன்? எத்தனையோ நாள்
யோசித்திருந்தேன் கரையிலமர்ந்து
அலைகள் ரசித்தவண்ணமாய்.

விடையில்லை. ஆர்வம் வந்தது.

எழும்பி வந்து உயிர் எடுத்துச் சென்ற
அலை உணர்த்தியது.
அலறி உயிர் விட்டவர்கள் கண்ணீருடன்
எஞ்சியோரும் சிந்திய கண்ணீரால் என.

விடையில்லாத போது ரசித்த நான்.
விடைகண்டபோது மரித்தேன்.

கடல்தாய்

எத்தனையோ நாளாய் அழைத்திருந்தேன் விருந்துக்கு- உன்னை!
கடல்தாயே கைநிறைய காசு கண்ட வேளையெல்லாம்
கை தொழாத நிமிடங்கள் இன்னமும் நினைவில் உண்டு
நீ தொட்டுச் சென்ற கரைகளில் கட்டித் தழுவி
இருக்கின்றேன் தாரத்தை உன் தயவில்.
என் தாரமானவள் தாயானபோதும் உன்
ஆசிவேண்டியே அழுதிருக்கிறேன் கரையில்
களித்திருந்த வேளையெல்லாம் கருவில் இருக்கும்
குழந்தைக்கு கடலரசன்-கடற்கன்னி என உன்வாரிசாக
எண்ணித்தானே எழுதிவைத்தேன் நேற்றும் கூட.
அலையனுப்பி அலைத்துச்சென்றபோதெல்லாம்
தழுவிச் சென்றதாய் தாண்டவமாடியதுன்டு. ஆனால் இன்று
வீடுதிரும்பிய பின் தான் உணர்ந்தேன் அலைத்துச் செல்லவில்லை- அழித்துச்சென்று விட்டாய் என்று் -
தாயே உறவு கொன்ற கொடுமையை யாரிடம்

Tuesday, September 26, 2006

கைதி-புல்லாங்குழல் இன் பயணம்

மூங்கில் அல்ல அது இசையின் முதுகுத்தண்டு
கைதி அல்ல. அவன் மனிதனின் மறுவாழ்வின் வடம்

தண்டினில் வலம் வந்த காற்று
வலுவூட்டும் வருந்திய மனத்தையும்.
தண்டனை முடிந்து வந்தவன் சுவாசம்
வலியுறுத்தும் வருந்தியவன் மனத்தையும்

பிஞ்சினில் வெட்டி குழலானது அழிந்திட அல்ல
மூங்கிலின் பெருமை சேர்த்திட
கைதியாகி வெளிவந்தது அழிந்திட அல்ல
மனித மனத்தின் பொறுமை காத்திட

துளைவலம் வந்த குழல் யாரையும் வருத்துவதில்லை
மனம் கசிந்திட.
சிறைவலம் வந்த இவனும் தவிர்த்திட மறப்பதில்லை
மற்றவன் கைதியாகிட

மூங்கில் குழல் ஆனபின்னே அதனை மூங்கீல்
என்பதில்லை யாரும்
கைதியான பின்னே அவனை மனிதன் என
அழைப்பதில்லை யாரும்

தினம்தினம் ஆயிரமாயிரமாய் ராகங்கள்
சுவாசமாக உட்ச்செல்லும் குழலினுள்
தினம்தினம் ஆயிரமாயிரமாய் அறிவுரைகள்
சுவாசமாக இல்லை சுட்டிகாட்டியபடி

புல்லாங்குழலையும் மனிதன்தான் இயக்குகின்றான்
பலரும் களித்திடவேண்டி
கைதியான மனிதனையும் மனிதன் தான் இழிக்கின்றான்
பலர் இளித்திட வேண்டி

குழல்கொண்டு கலையும் வளர்க்கலாம்
கொலையும் செய்யலாம்
இவனையும் கலைஞனாவும் ஆக்கலாம்
கொலையும் செய்யலாம்

குழலானபின்னே அதனை காண்பவர் யாரும் கவனித்து
சுவாசம் கொடுக்க மறப்பதில்லை.அறியாத போதிலும்
கைதியான பின்னே கண்ட யாவரும் அவனை பலித்து
பேசிடாதிருப்பதில்லை.அவனைப் பற்றி அறியாத போதும்
புல்லாங்குழல் போலவே கைதியும் அனைவரின் வாயிலும்
அங்கலாய்ந்தாலும் கைதியான இவனின் பயணமும்
குழல்போல மற்றோறை மகிழ்வித்து இருப்பது மட்டுமேயன்றி
மனிதனை கைதியாக்கிடாமல் இருப்பதுவே

அடங்க(காத)ல்


அம்மாவின் ஆணைக்கு அடங்கிடாத நான் அவசரக்காரன் என்றானேன்
அப்பாவுக்கும் அடங்கிடாத நான் அடங்காப்பிடாரி என்றானேன்
ஆசானுக்கும் அடங்கிடாத நான் ஆத்திரக்காரன் என்றானேன்
கடவுளுக்கும் அடங்கிடாத நான் நாத்தீகன் என்றானேன்
ஊர்மக்களுக்கும் அடங்கிடாத நான் முரடன் என்றானேன்
உன்னிடம் அடங்காததால் மட்டும் உனக்கு காதலன் ஆனேனே!
எதற்கும்!ஏன் உனக்கே அடங்கிடாத நான் அந்த
ஓர் வார்த்தையில் அடங்கிவிட்டேனடி.

Friday, September 22, 2006

என் தாயினும் மேலான காதலியே!!

வேண்டுமடி இன்னொரு பிறப்பு எனக்கு..உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திட அல்ல

உன் வயிற்றினில் கருவாய் தரித்திட. ஆமாம்

நடைபயிலையிலே கைவிட்டு நடக்க சொன்னாள் தாய். ஆனால்
நீயோ நடைபாதையிலே கைகோர்த்து நடக்க கற்றுத்தந்தாய்.

நா பேச எழாத போதும் அதிகம் பேச செய்தாள் தாய் ஆனால்
நீயோ நா துடிதுடித்தும் அதிகம் பேசாதிருக்க கற்றுத் தந்தாய்.

கிறுக்கிய போதெல்லாம் கிறுக்காதே என்றாள் தாய் ஆனால் நீயோ
கிறுக்கிய போதெல்லாம் கசக்காதே என கவிதை கற்றுத் தந்தாய்

காத்திருந்து கண்ஏங்கிய போதெல்லாம் காலத்தை குறை
சொன்னாள் தாய் நீ காத்திருந்த கணங்களின் வலிமை கற்றுத் தந்தாய்.

பள்ளியில் பலருடனும் பழகிட வேண்டாம் அவன் நட்பு என்றாள் தாய்
நீயோ பார்ப்பவருடன் எல்லாம் பழகச் செய்து நட்பினை கற்றுத்தந்தாய்

நான் மெதுவாக பேசிட சத்தமாய் பேசு என சத்தமிட்டாள் தாய்.ஆனால்
நீயோ பேசாமலே பதில் சொல்லிட மெளனமொழி கற்றுத்தந்தாய்

பழகியவன் பழித்திட கோபம் கொண்டதில் பெருமைகொண்டாள் தாய்
ஆனால் நீயோ கோபம் கொன்று பொறுமை கற்றுத்தந்தாய்

அழகான ஆடைகளாய் அணிந்திட செய்தாள் தாய்.ஆனால் நீயோ
நான் அணிந்த அழுக்காடையும் அழகாக்கித் தந்தாய்

தனிமையில் தாமரை ரசித்ததையும் மறந்து உறவுடன்
உலாவச் செய்தாள்ஆனால் நீயோ

'கலவரம் கார்கிலில் மட்டுமா! காதலர்களிடமும் தான்
அசைவுகள் கண்ட போதெல்லாம்' என கவிதை தந்தாய். இப்படி

எத்தனையோ கைக்கெட்டாத கவிதைகளாகி விட்டன உன்னுடன் கைகோர்க்கும் வரையில் அதனால் காதலியே!

வேண்டுமடி இன்னொரு பிறப்பு உன்மடியினில். இழந்த என் இறந்த காலத்தை இன்றுபோல கவிதையாக்கி களித்திட.

Tuesday, September 19, 2006

மாங்கல்யத்தின் மயக்கம்.

அவன் நினைத்தபோதெல்லாம் கழட்டிச்சென்றது தெரியும்
தாலியும் கழன்று கயிறு மட்டுமே இருப்பது தெரியாது

குடிக்க காசு இல்லையென்றால் அடிக்க தெரியும்
அடித்த சரக்கு இறங்கிய பின்னே அடித்ததும் தெரியாது

இவனின் குடல் எரிவது தெரியும்.ஆனால் அடுத்தவேளை
உணவுக்கான அடுப்பு அணைந்தது தெரியாது.

குடியின் குமட்டலில் வாந்தி வந்தது தெரியும்
குடியால் குடியின் சாந்தி போனது தெரியாது.

குடிக்காது உயர்ந்தவனின் உள்ளசேதி தெரியும்
பாதிதெரிய உடுத்தியிருக்கும் குடும்பத்தின் கதி தெரியாது.

குழந்தை பெற்றுகொள்ள தெரியும் .அவனை நல்விதமாய்
வளர்ப்பது அவளே சொன்னாலும் தெரியாது.

குடியில் குழந்தையை குபேரன் என்று சொல்லத் தெரியும்
குழந்தை கூலைத் தவிர எதும் உண்ணாதது தெரியாது.

அடுத்தவீட்டு குழந்தையின் பண ஆசைகள் தெரியும்
அவன்குழந்தையின் மன ஆசைகள் சொன்னாலும் தெரியாது.

குடியின் போதை குடலுக்கு நல்லதல்ல எனத் தெரியும்
குடியின் போதை குடிலுக்கு நல்லதல்ல எனத் தெரியாது

குடிக்ககூடாது என மனம் சொல்வது தெரியும்
விட்டுவிடும் வழி பணம் இல்லாத போதும் தெரியாது

குடியாலே இவன் இறக்கப்போவது தெரியும்.இவன் இறந்தபின்னே
பூப்பொட்டோடு சிரிப்பும் பறிக்கப் போவது பதட்டம் கூட தராது.

இப்படி இருந்தும்-இறந்தபின்னும் என்ன நடக்கும் எனத் தெரிந்தும்
தெரியாதது போலவே தான் தொடர்கிறது மாங்கல்யத்தின் மயக்கம்.


இது புரியாத புருஷன்களுக்காக புதுக்குடித்தனத்திலும்
தொடர்வதுஏனென்று தான் என் தாக்கம்.

புடித்த வாழ்க்கையில் வாழ்வை பிடித்து கொண்டவை

காலையில் கடமைக்கு செல்ல கண்விழிக்க பிடிக்கலை.

விழித்து குளித்துமுடித்து செல்லையிலே பிரிவு பிடிக்கலை.

பேருந்தில் பயணஞ்செய்யையிலே நெரிசல் பிடிக்கலை.

நெரிசலில் உருவாகும்வியர்வையும் சட்டைசுருக்கங்கூட பிடிக்கலை.

நேரத்தில் சென்றாலும் சிடுசிடு என்றிருக்கும் முதலாளி பிடிக்கலை.

மணமானவன் எனத் தெரிந்தும் வலைவிரிக்கும் மாதை பிடிக்கலை,

தொடங்கையிலே வரும் தொல்லை அதைத் தருபவர்களை பிடிக்கலை,

ஆசையாய் அன்பானவள் கட்டிகொடுத்த சாப்பாடும் ஆறியதால் பிடிக்கலை

வேலையை முடித்து திரும்பயிலையே மனைமக்களுக்கு இனிப்பு வாங்கமுடியாத நிலையில் இருப்பது பிடிக்கலை.

உழைத்து முடித்து களைத்து திரும்பையிலே தெருவில்
கிளம்பும் புழுதியும் புடிக்கலை.

புத்துணர்ச்சி என புகைப்பிடிப்பவன் விடும் புகையும் புடிக்கலை.

மனை வந்தவுடன் மகிழ்ச்சியை மகிழ முடியாமல் களைப்பு
கண்இணையச் செய்வது புடிக்கலை.

இப்படி தினம்தினம்பிடிக்காத இத்தனை நிலை கடந்தும்- கண்டும் ஏனோ வெளியில் சொல்லமுடியாத நிலை பிடிக்கலை.

ஆனாலும் ஏனோ தெரியவில்லை.வாழ ரொம்ப பிடிச்சிருக்குஎன்றுதான் சொல்லிக்கொள்கிறேன் எவர் கேட்டாலும்.

Friday, September 15, 2006

பெண்ணே!நீயும் பெண்ணா?

மண் விட்டுப் பிரிந்த மலை- தாய் பிரிந்த சேய்,
நெஞ்சம் விட்ட நினைவு -நெருப்பை விட்ட அனல்,
வானம் விட்ட மேகம்- நட்சத்திரம் இல்லா இரவு,
துடுப்பு இல்ல படகு -பூக்கள் இல்லா செடி,
வாசம் இல்லா மலர்- பாசம் இல்லா பாலகன்,
நீர் இல்லா குளம்- கோயில் இல்லா ஊர்,
உயிர் இல்லா உடல்- புதிர் இல்லா வாழ்வு- என எவ்வளவோ பேசினாய், என்னை பிரிந்திருந்த கணங்களின் தவிப்பை கவிதையாய்!காதலித்த போது. என் நிழல் விழாத பகலும் நித்திரையாய் உணர்ந்தேன் என்றாயே?
மாற்றிக் கொண்டாயோ மணமான பின்னே மனதினை?
மங்களகரமாய் திரிகின்றாயே மலையாய் பேசிய நீ. மாறாக பேசிடாத நான் மட்டும் தாடியோடு. பெண்ணே! நானும்தான் மாறிவிட்டேன் இன்று.
ஆம் நானும் கவிதையாய் பேசுகின்றேன் பெண்ணே நீயும் பெண்ணா?

Wednesday, September 13, 2006

உன் எண்ணச் சிறகுகள்


களங்கிய குட்டையை ரசிக்க கற்றுத் தந்தவள்-நீ
மெளனமொழி கண்கள் பேசிட கற்றுத் தந்தவள்-நீ
விடியலை வரவேற்றிட கற்றுத் தந்தவள்-நீ
அன்பு எனும் சொல்லின் அடையாளம் காட்டியவள்-நீ
நொடியின் நீளம் கற்றுத் தந்தவள்-நீ
இடியின் இரைச்சலை இசையாக்கி காட்டியவள்-நீ
ஓடி ஒளியும் மின்னலின் இயலாமையை காட்டியவள்-நீ அன்று
அருகில் இருந்ததால் அனைத்தம் இனித்தன.இன்றோ
நீ அருகில் இல்லாததால் தொடர்ந்திடும் அலைகள்,
மலைகளின் குளுமை,வானவில்லின் வண்ணம்,
தென்றலின் தீண்டல் என எதுவுமே என்னைத்
தொடுவதில்லை. உன் எண்ணங்களைத் தவிர.

Tuesday, September 12, 2006

முன்னோர்கள்


காந்தியை காட்டி அகிம்சை வலியுறுத்தினர்.
புத்தன் காட்டி ஆசை கூடாது எனவும் வலியுறுத்தினர்.
ஏசுவை காட்டி அடித்த கைக்கு ஒத்தடம் வைக்க கற்பித்தனர்
பாரதியார் பாட்டு சொல்லி தமிழ் வலியுறுத்தினர். ஆனால்
காதல் கொண்டு கைப்பிடிக்க நினைக்கையில்
முட்டுக்கட்டையாய் முன்னோர்கள்.
காரணம் மதமும் இனமும் வேறாம்
மகான் வழி வந்த மக்கள்.

விடுதலை


திட்டிய தந்தையிடம் இருந்து,உழைக்கச் சொன்ன ஊர்மக்களிடம் இருந்துஉதறிய உறவிடம் இருந்து, விடுதலை என நினைத்து ஊர்விட்டு வெளிநாடுவந்ததும் தான் உணர்ந்தேன்.விடுதலை அல்ல .சிறை தண்டனை என்று.

புலம்பல்


வெளிநாட்டில் வேலை- டாலரில் சம்பளம்.
ஆண்டுக்கு மாதம் இரண்டு என விடுமுறை
கழிக்க தாயகம் திரும்பியவன் கண்கலங்கினான்.
மனிதனை மனிதன் சுமக்கும் கொடுமை என.
புலம்பியவன் அறிவானா? சுமையாளியின் புலம்பலை.
அயல்நாடுமுன்னேற அன்னை நாடு விட்டு, சென்று உழைத்திடும்உதவாக்கரை நீ என.

நானும் ஒரு அகதி


அன்பான அம்மா உண்டு, அறிவான அப்பாவும் உண்டு .
அடக்கமான அக்கா உண்டு,ஆதரவான அண்ணனும் உண்டு.
தங்கமான தங்கை உண்டு, தழுவிக்கொள்ள தம்பியும் உண்டு.
கண் போன்ற காதலி உண்டு, உரம் போன்ற உறவும் உண்டு .
வேலை இல்லாதபோது அருகில் இருந்த இவர்கள் யாரும், இதோ
இன்று வெளிநாட்டில் வேலை,அளவுக்கதிகமாய் சம்பாதிக்கையிலே
அருகில் யாரும்இன்றி நான் மட்டும் அகதியாய்.

Monday, September 11, 2006

வாக்காளனின் வாக்குறுதி


சிலநாள் கிடைத்த மதிய உணவால் நாயாய் நன்றி காட்டினான்.மறுதினங்களில் மாறிப்போனான் நாயாகவே!!.
எச்சில் இலைகளுக்கு நடுவில்
.நாக்கு மாறாமல் இன்னமும் கை காட்டுகிறான் இவன்
கைகட்டி வாக்கு தந்த தலைவனோ காரில் கண்டுகொள்ளாமல்.

அரசியல்வாதிகள்

ஆசைபட்டாலே அடைந்திடும் அதிர்ஷ்டசாலிகள் - அரசியல்வாதிகள்,
தனக்காவும் தன்மனைக்காவும் மக்களை மடியசெய்யும் சுயநலவாதிகள்,
மந்திரிகளாகி மதப்பிரச்சனையைத் தூண்டும் மந்திரவாதிகள்,
தலைமகன்என சொல்லி தலைபல வாங்கி மலையாய்
செல்வம் சேர்க்கும் கயவாளிகள்,
சமயம் பார்த்து சாதியை வைத்து சண்டை தூண்டும் சந்தர்ப்பவாதிகள்,
காலில் விழும்போதும்,கையெடுத்து வணங்கும் போதும்,
காலை வாரிவிடவும்-கையை வாங்கிடவும்,
வஞ்சம் செய்யும் நெஞ்சுண்ட கயவாளிகள்.
குற்றம் பலசெய்தாலும் சட்டங்கள் பல வந்தாலும்
செளகர்யம் குறையாமல் சதுரங்கம்ஆடும் அகப்படாத ஆயுள்கைதிகள்.
அறிக்கைகள் பல அறிவித்து ஆசைதனைதூண்டிவித்து
துன்பப்படுவோரின் வயிற்றில் அடிக்கும்ஆக்கிரமஜாதியினர்.
தினந்தோறும் பூச்சு இன்றி புன்முறுவலோடு பலபல வேடம்
போடும் பெரும் நாடக கூட்டத்தினர்கள். இதை அறிந்தும்
மனம் வருந்தியும் மனம்மாறி குமுறுதல் மனித இயல்பு.அந்த மனதை மாற்றிடல் சாத்தியமானது எப்படி என்பதை அறிந்த அராஜகவாதிகள்.
சலவைநோட்டுக்களால் சண்டைக்காரனையும் சாட்சிகாரனாக்கிடும்
சாதூர்யவாதிகள்.இவனின் சுயரூபம் கண்டும் தெரிந்தும்-
தேர்தலுக்கு முன் கிடைக்கும் சில மதிய உணவுடன் கூடிய, மாமிசதுண்டுகளுக்கு நன்றி மறக்காத மனிதமனம் தான்அவர்களின் மந்திரக்கோலோ?இல்லை அவன் ஆட்சி செய்யும் அமைச்சரவையோ?அவனையே அழைக்கின்றனறே அதிக ஓட்டுக்கள் இட்டு.இப்படியும் ஒரு வித்தியாசமானவிந்தையா!! இல்லையில்லை .இதுதான் இன்றைய இந்தியா.

காற்றும் - கனவும்


சிறகில்லா பறவைகளா? காற்றும் கனவும்
இவைகள் கட்டுபாடின்றி செல்கின்றனவே.
பண வலுவில்லாதவனை கனவும்,
மன வலுவில்லாதவனை காற்றும்,
வின்னில் பறக்க வைக்கும் விந்தைகள் ஏனோ?
இவற்றை வெறுத்தோர் வெளிநாட்டிலும் இல்லையாமே!
இவைகளை பார்த்தவர்கள் பாரினிலேது-
இவைகளை உணராதவர்கள் உலகினிலேது.
காதலுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் எவ்வளவோ?
அளவில் அடங்கவில்லையே.
நீங்கள் கொண்டு வந்த வரம்தான் என்னவோ?
காதலை வாழவைக்கவா?இல்லை இக்கவியை வரவழைக்கவா?
காதலித்து பிரிந்தோரா? இல்லை இறைவனுக்கு
பிறந்த இரட்டைகுழந்தைகளா?உண்மையில்
உங்களின்உறவு தான் என்ன? கனவே!நீயே
இதற்கும் பதில் சொல்லிடு.உன் வரவுக்காக உறக்கத்தில் விழித்திருக்கிறேன்.கேள்வியோடு

காதலும்- கஞ்சாவும்



காதலின் பலம் மட்டுமல்ல கஞ்சாவின் பலமும் பணம் வைத்திருப்பவனாலும் அழிக்க முடியாது.
காதல் மட்டுமல்ல கஞ்சாவும் உன்னை உலகம் மறக்கச் செய்யும்
காதலி உடன் இருந்தால் உறக்கம் உழைப்பு தேடாதது போல
கஞ்சா உடன் இருந்தாலும் எதுவும் தேடாது.
காதலிக்காக காத்திருக்கும் கணங்கள் போல
நரகமாய் நகரும் கஞ்சா இல்லாத கணங்கள்.
காதலியா?காசா? என்றால் காதலி வேண்டுவதுபோல
கஞ்சாவா? காசா? என்றால் கஞ்சா தான் கேட்கும்.
காதலியின் நினைவென்னும் சிறகு கொண்டு பறப்பதுபோல
போதை என்னும் சிறகு கொண்டு பறக்கலாம் பார் தாண்டி.
காதலி சொன்னதை அடையத்தூண்டும் காதல் போல
மனம் சொல்வதை அடையத்தூண்டும் கடைசி வரை.
காதல் கொண்ட நேரம் சொர்க்கத்தில் சுற்றித்திரிவாய்
கஞ்சா கொண்ட நேரம் சொர்க்கத்தை சொந்தமாக்கியிருப்பாய்.ஆக
காதல் வேறல்ல கஞ்சா வேறல்ல.
காதல் புனிதமெனில் கஞ்சாவும் புனிதமே.
காதலில் தோல்வி உண்டு.காதலி கடைசி வரை
வராமல் போனாலும்போகக்கூடும்.ஆனால்
கஞ்சா நீயே ஒதுக்கினாலும் உன்னை ஒதுக்கிடாது
தொடரும் கடைசி வரை.
காதலி விட்டுச் சென்ற நினைவுபோல.

Sunday, September 10, 2006

காதல் கல்லூரி


ஷாஜகான் இல்லையடி இன்று
இருந்திருந்தால்!!!
நம்மிடம் காதல் பாடம் கற்றுக் கொள்ள
காத்திருந்திருப்பான் தினமும்
கதிரவனைப் போல.

வதந்தியாய் வந்த காதல்


குளித்திட குளக்கரை நோக்கி செல்லையிலே- அவளும் அங்கே
குளித்திட, குளித்தவர்கள் இணைத்து பேசிட,
பேருந்துக்காக காத்திருக்கையிலே- அவளும் ஏறிட
பயணிகளும் இணைத்து பேசிட,
மதிய உணவு மறந்த தினம் மனிதாபிமானமாய் உணவு தந்திட,
உடன் உன்டோர் இணைத்து பேசிட,
மழைக்காக ஒதுங்கி நின்றிருக்கையிலே- குடை பிடித்து
சென்றோரும் இணைத்து பேசிட,
குலதெய்வம் என குடும்பத்தோடு அவள் சென்றிட குலத்தொழிலாய்கொண்டநான் குங்குமம் கொடுத்திட,
கண்ட காற்றும் சற்று இரைந்து வீசியபோது உணர்ந்தோம்
மரங்களும் இணைத்து பேசுவதாய் மனிதர்களோடு. இணைத்து
பேசியதால் இணைந்து போன இதயங்கள் .இணைந்து வாழ
விரும்பிய போது யாருமே வரவில்லை.
வாழ்த்திடவும் வரவேற்றிடவும்.ஆனால் வதந்தி மட்டும்
வந்த வண்ணமாய் மற்ற ஜோடியை சேர்த்து பேசியபடி.ஊர்
வதந்தியால் வந்த காதல் எங்களை ஊமையாய் ஆக்கி போனது.

Saturday, September 09, 2006

திருமண அட்சதை.


கண்ணாடி பார்த்தேன்-நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
உணவு உண்ண அமர்ந்தேன்- நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
குளியலுக்கு சென்றேன்-நீ தான் நின்றாய்.ரசித்தேன்
தலை கோதினேன்-நீ தான் வருடினாய்.ரசித்தேன்
தாலிகட்ட சென்றேன் நீ தான் நின்றாய்-
ரசிக்கவில்லை மாறாக மரித்தேனடி.ஆம் கையில் அட்சதையோடும்-ஐந்து வயது குழந்தையோடும் நீ.

நீயும்-நானும்


காலையில் என்னை கண்ட கதிரவன்
கேட்டது,ஏன் சேவல் கூவவில்லை?என அல்ல.எங்கே நிலா என்று.
காவேரியில் நீராட சென்றேன். காவேரி கேட்டது, எங்கே எனக்குவரி?
என அல்ல.எங்கே என் தங்கை கங்கை என்று.
பள்ளியில் ஆசிரியர் கேட்டார்,பாடம் படித்தாயா? என அல்ல.
எங்கே களஞ்சியம் என்று.
கோயிலில் குருக்கள் கேட்டார்,எங்கே தட்சனை? என அல்ல
எங்கே மகாலட்சுமி என்று.
ஐஸ்கிரீம் கடைகாரன் கேட்டான்,என்ன வேண்டும்? என அல்ல
எங்கே வெண்ணிலா என்று.
கடற்கறையில் சுண்டல் விற்பவனும் கேட்டான்,சுண்டல் வேணுமா?
என அல்ல.எங்கே கடற்கன்னி என்று.
உணவுவிடுதியில் பரிமாளனும் கேட்டான்,என்ன சாப்பிடுகிறாய் என அல்ல.எங்கே அன்னலட்சுமி என்று.
கல்லூரிக்கு சென்றேன்,கண்டவனும் கேட்டான்.எங்கே வேலைசெய்கிறாய்?என அல்ல.எங்கே கண்ணகி என்று.(நீ கற்புக்கரசியாச்சே)
மரத்தடியில் அமர்ந்தாலும் உதிரும் இலைகளும் கேட்கின்றன,எப்படி இருக்கிறாய்? என அல்ல.எங்கே தென்றல் என்று.
இப்படி நான்எங்கு சென்றாலும் உன்பெயர் சொல்ல
எத்தனையோ உண்டு.என் தாடியோடு ஜோடியாய்.
எனக்கு தெரியும் ப்ரியா என நீ கொண்டபெயரால் தான்
பிரியாமல் பிரியமாய் இருக்கிறாய் பிரிவினையிலும்.ஆனால்
உனக்கு உண்டா? என் நினைவு ஒரு காவியமாய் இல்லையானாலும் ஒரு ஹைக்கூ கவிதை போலாவது!!!

உன் நினைவுகளோடு,
காவியன்.

Thursday, September 07, 2006

சுமைதாங்கியோ? பெண்ணிணம்


பிறந்தது முதலே சுமைகள் தான் பெண்ணே-உனக்கு
ச்ச்ச்சீ பெண் எனும் வெறுப்பு சுமையாய் பிறந்ததுமே,
பொறுப்பாய் படித்தாலும் உனக்கெதுக்கு படிப்பு
என்னுமொரு தடை சுமையாய் உன்னுள்.
தடைப்பட்ட படிப்பால் வீட்டு வேலைகள்
என்னுமொரு, கடமைகள் சுமையாய் உன்னுள்.
தருணம் தாண்டி தாவணிக்கு மாறிட மன்மதர்களிடம்
இருந்து மானம் காத்துக்கொள்ளும் சுமை உன்னுள்,
சுமை தாண்டி மனம் பறித்தவன் மனமும் சேர்ந்து
சுமையாய் உன்னுள்- இருந்திட,போதாதென பின்தொடர்ந்தவன்
எதிவீட்டில் அமர்ந்திருக்க, அவனைவிட்டு இவளை ஏசும்
எதிரெதிர் வீட்டினர் சுமையும்போதாதென, இவளையே
சுமையாய் எண்ணி யாருக்கோகட்டி கொடுத்திட
அங்கே மாமியார் என்னுமொரு பெரிய்ய்ய்ய சுமை,
பகல் பாரம் முடிந்து இரவில் படுக்கை சென்றிட அங்கே
தாலிகட்டிய அவனின் சுமை.அவன் சுமை தினம் தாங்கியதிலே
இன்னொரு உயிர்ச்சுமை,என சுமை தொடர்ந்த மாதம் பத்தில்
பிறந்தபெண் குழந்தை கண்டதும் இவள் சுமந்த சுமைகள்
ஒவ்வொன்றாய் இறக்கி வைக்கப்படுவது என்ன விஞ்ஞான வளர்ச்சியோ?பெண்ணுக்கு பெண்ணே சுமையாய் சுமைகளை சுமக்கச் செய்யும்கிராமங்கள் என்று காணாமல் போகுமோ!!!?இந்திய வரைபடத்தில் இருந்து.?
வருத்ததோடு,

காவியன்.

போதி மரம்


ஒருபெண்ணிடம் உன்ணை தொலைத்துப் பார்
போதி மரம் தேவையில்லை!நீயும் புத்தனாவாய்
புத்தன் அனைத்தையும் துறந்திட ஆசைப்பட்டு
ஆசையையும் இழந்தான்.நீ அவளை அடைந்திட
ஆசைப்பட்டு அனைத்தையும் இழந்து அவளையும்
இழந்து நிற்பாய் மனிதனாய் அல்ல.போதிமரமாய்!!!!

காதலுடன்,
காவியன்.

விடை தருவாளா?


அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளம் கவிஞனுக்கு கரு கிடைத்த களிப்பு,
ஆனந்தமாய் விழும்அருவியின் ஓசை இசையமைப்பாளனுக்கு
சுதிகிட்டிய சுகம்,
கார்கிலில் யுத்தம் அண்டைநாட்டுடன் கதாசிரியனுக்கு
கதைகளம் கிடைத்த களிப்பு,
கூவுகின்ற குயிலின் குரல் குரு தேடும் பாடகனுக்குகுரு கிடைத்த குளிர்ச்சி,
பெட்டையை விரட்டிச் செல்லும் சேவல் சிறுவர்களுக்கு
புதுவிளையாட்டு விளைந்த சுகம்,
கல்லூரியில் கலாட்டாவால் மறியல்- காதலர்களுக்கு
காரணம் கிடைத்த களிப்பு,
மேகம் கறுத்து இடியோடு இருட்டிடவிவசாயிகளுக்கு
மழை காணும் சுகம்,
காற்றில்மணம் பரவிட பூக்கள் மலர்ந்தசுகம் தேனிக்களுக்கு. ஆனால் என்னுள் ஏன் இந்த இன்பம்?ஓ அவளின் கடைக்கண் பார்வை பட்டு சென்றதாலா?விடை தந்து மடிதருவாளா!!! கொடிஇடையாள்!!!!!

விடை தேடி,
காவியன்.

மனிதனுக்கு இறப்பு ஏன்?ஒரு கேள்வி


மலர்கள் வரம் கேட்கின்றன-மலரும் ஓசையை
உலகுக்கு உணர்த்திட.
மரங்கள் வரம் கேட்கின்றன-தன்னை தீண்டி செல்லும்
காற்றினை சிறைப் பிடித்திட.
புற்கள் வரம் கேட்கின்றன-தண்டுகொண்டு தாவரங்கள்
போல தலை நிமிர்ந்திட.
பூனைகள் வரம் கேட்கின்றன-புலியை போல பாய்ந்து
வேட்டையாடிட வேண்டி.
பெட்டைகள் வரமோ!பொறித்த குஞ்சினை புசிக்கும்
பருந்தை பறந்து பழிவாங்கிட.
குருவிகள் வரம் கேட்கின்றன-குயில்கள் போல கூவிடவேண்டி.
மனிதனும் வரம் கேட்கின்றான்.கண்ணில் கண்டதை
எல்லாம் ஆண்டிட வேண்டி.

பூக்களோ முதல்நாளிலேயே மடிந்திடுது,
மரங்களும் முடியாமலையே தரைசாய்கிறது,
பெட்டையும் தோல்வியாய் தரைவருது தனியே,
குருவியும் குயிலாய் கூவி இறையாகுது வேடனுக்கு,
புற்களும் முயன்றும் முடியாமல் தரை சாயுது,
பூனையோ பன்றியின் உறுமலுக்கே ஓடுது,
ஆனால்மனிதனே உனக்கு ஏன் இறப்பு?

விலங்கையும் கூண்டில் வைக்கிறாய்,
கப்பலையும் மிதக்க வைக்கிறாய்,
விமானத்தை பறக்க வைக்கிறாய்,அவ்வளவு ஏன்?
உடல்உறவு கொள்ளாமலேயே இனவிருத்தியும் செய்கிறாய்.
இருந்தாலும் நீ இறப்பது ஏன்? இறைவன் இருப்பதாலா?
இல்லைநீ இறைவனை இம்சிப்பதாலா?

கேள்வியோடு,
காவியன்.

மின்சார(மக்கள்)தொகை


ஆல்வாஎடிசன் அறிவில் வந்த அதிசயமே!
கருமை போக்கும் கதிரவனின் கருப்புவாரிசே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்றனர் ஆலயத்தினை!
தட்டியதும் திறக்காமலேயே தந்தாயே வெளிச்சத்தினை.
காற்றும்-நீயும் என்ன எதிர்மறை பங்காளிகளோ!!.
காற்றை உணர முடியும் பிடிக்க முடியாது.
உன்னையும் உணர முடியும் பிடிக்க முடியாது பியூஸ்போனாலன்றி.
காற்று எங்களை பிடித்தாலும் உயிர்பிரிவது உறுதிதான் .நீ
எங்களை பிடித்தாலோ உயிர்பிரித்து குடிப்பதோ குருதி தான்.நீரிலும் பாய்கிறாய் நிலத்திலும் பாய்கிறாய் எப்படி இருப்பாய்?
தண்ணீர் மாதிரியா?இல்லை தகரம் மாதிரியா?
உன்னை சேமித்து வைக்க சொல்கின்றனரே!அடுத்த சந்ததிக்காகவா?
ஏன் உங்களுக்கு ஓய்வு இல்லையோ? ஓய்வில் களவும் இல்லையோ!
உங்கள் சந்ததியை வளப்படுத்த.ஆம் எனில் வாங்கிகொள் ஆண்மையைகடனாக இந்திய மக்களிடம் இன்றே.
ஆயிரமாயிரமாய் வளர்த்திடு -ஆல்வாவின் அதிசயத்தை.ஆம்
இதோ இன்று முதல்நிலையை எட்டும்வேகத்தில் இன்னல் நிலையிலும்
நீ பாய்வதை விட வேகமாக.இருவருக்கேன் ஒருவர் என்ற விளம்பரம் வியாதியாய் பரவி விழிக்க சொன்னாலும் விழிக்காமலே
இன்புற்றிருக்கும் இந்தியா.இன்னல் நிலையிலும் மறப்பதில்லை-மறைப்பதுமில்லை இந்திய மக்கள்தொகைப் பெருக்கத்தை.
கலக்கத்தோடு,
காவியன்.

இழப்புகள்


அண்டைவீட்டுக்காரன் அனுபவித்த ஆடம்பரம் கண்டு
ஆறுவயது முதலே அமெரிக்கா மோகம்.மோகம் தொடர்ந்திட
தொடர்ந்திட்ட படிப்பால் உறக்கம் இழந்து-பருவத்தில் பட்டம்
பெற்றும் பருவசுகம் இழந்தும்-பணியில்அமர்ந்தும்-அமெரிக்கா
பறந்தும் இழப்புகள் மட்டும் தொடர்ந்தபடி.

கோழிகூவிடாத விடியல்,சாணம் தெளித்திடும் ஓசையற்ற காலை,
கோலங்கள் இல்லா வாசல்கள்,பக்தர்கள் இல்லா கோயில்கள்,
சுப்ரபாதம் கேட்டிராத பூசையறை,இறைச்சல் இல்லாத சாலைகள்
புகைகக்கிடாத ஊர்திகள்,பச்சைகொடி காட்டி கதவு சாத்தும் சாமான்யன்
இல்லாத ரயில்நிலையங்கள் என சூரியன் வந்ததால் மட்டுமே விடியல்
கண்டதாய் விறையும் இயந்திரத்தனமான இந்தியமனிதர்களுடன்
இதோ இன்று நானும்.

படியினில் தொற்றி-இடிசல்,நெரிசல்,திருட்டு இல்லாத பேருந்து பயணம்,
இரவுநேர காவலனின் கைத்தடி சத்தம் கேட்டிராத காவல்,
அடுக்குமாடி குடியிருப்பில் அண்டைவீட்டான் சங்கதி அறியா அவலம்,
காதலியில்லாகடற்கறை வாசம்,
நயாகராவிலும் குடும்பம் இல்லாத கும்மாளம்,
குடியரசு,சுதந்திர தினத்திலும் கொடி பறந்து பாறாத ஏக்கம்,
அம்மா,அப்பாக்கள் தினங்கள் வந்தாலும் வாழ்த்துக்கள் மட்டுமே-அதுவும்அரவணைப்பு இல்லாத தொலைபேசியுடன்,
காதலி இருந்தும்-கட்டி தழுவாதகைகள்,மின்னஞ்சலில் இதழ்பதிப்பதுடன் பிறந்தநாளிலும் பிரிந்தே இருப்பது.

வெடியோசை கேட்டிடாத தீபாவளி திருநாள்,
கரும்பு சுவைத்திடாத பொங்கல் பண்டிகை,
மாடு உண்ண கண்டிடாது மறையும் மாட்டுப் பொங்கல்,
காளையடக்கும் காளையர் காணாது கழியும் காணும்பொங்கல்,
திருவிழா என நாள் குறித்து நகரும்தேர் காணாத கவலை,
அந்நாளில் அலகு குத்தி அருள்வாக்கு சொல்லும்குரல் கேளாத கொடுமை,
கொடுத்து வைத்த முத்தங்களை கொடுக்காமலே ஓடிப்போன அடுத்தவீட்டுஅத்தைப்பெண் சுவாரஸ்யம்,
சுதிசுருகாமல் ஆசையாய் பாக்கு கேட்கும்பக்கத்துவீட்டு பாட்டியின் மரணம், என இழப்புகள் இதயத்தை தொடர்ந்துஇம்சித்திட,உதறித்தள்ளி தாய்நாடு திரும்பிட நினைக்கையிலே உணர்கிறேன்.
மனதையும் இழந்ததை பணத்தினால். இருந்தும்இழப்புகள் மட்டும் பணத்தைப்போல பெருகி கொண்டே,
இன்பங்கள் மட்டும் மனத்தைப்போல சுருங்கிகொண்டே.

அன்புடன்,

காவியன்

காத்திருக்கிறேன்.


வீட்டுவிஷேசத்திற்கு வந்து விஷேசமானவள் நீ,
நீ வீட்டிலமர்ந்துஉணவு அருந்திய இடத்தில் அமர்ந்து காத்திருக்கிறேன்.உணவுக்காக அல்ல,உன் வருகைக்காக.!!
கோயிலில் நீ நின்று கடவுளை வணங்கிய இடத்தில் நின்றுகடவுளை தொழுகிறேன்.கடவுளை கண்டிட அல்ல,உன் வருகைக்காக.!!!
விடியலேகூடாது என்றபடி விழிகள் எரிந்திட,எரித்தபடி உதிக்கும்
ஆதவனை திட்டி தீர்த்திட்ட அந்த இடத்தினில் காத்திருக்கிறேன்.
உதயம் காண அல்ல,உன்னை காண.!!
தண்ணிரற்ற காவிரியில் உன்காலடி பதிந்த சுவட்டில்,என்தடம்
பதித்த இடங்களில் மாடுகள் விரட்டி காத்திருக்கிறேன்.
புற்களுக்காக அல்ல,உன் வருகைக்காக.!!!
பேருந்தில் ஐந்து இருக்கைகள் இருந்தும்,நீஅமராமல் கம்பி பிடித்து
என்னை களித்து நின்ற கம்பியை பிடித்திட அல்ல,
நான் காத்திருப்பது உன் வருகைக்காக.!!!!
நாம் அமர்ந்து கிள்ளி எறிந்த புற்கள் கிள்ளிட நாம்இன்றி
சோர்ந்து தலைகுனிந்திருக்கின்ற இடங்களில்
காத்திருக்கிறேன்.உன் வருகைக்காக.!!
ஒதுங்கிநிற்க கூட முடியாத மரத்தடியில் உட்கார்ந்து அதன் உதிர்இலை
எடுத்து ஜாதகம் கணித்த இடங்களில்காத்திருக்கிறேன். உன்வருகைக்காக!!

கெட்டிமேளம் கொட்டி மூன்றுமுடிச்சு தாங்கிகொண்டதால் தலவாழையில் தடபுடலாய் சாப்பாடு சங்கதி அறியாதவருக்கும்.ஆனால்
எனக்குத் தானே தெரியும்-அது உனக்கு தாலிக்கயிறு அல்ல -
தூக்குகயிறு என்று.அதனால் தான் நாம்(நீ) இதுவரை வராத இந்தசவப்பெட்டியில் காத்திருக்கிறேன்.!!!
உன் வருகைக்காக அல்ல,உன்னை எடுத்து வரும் எமனிடம் என்னுயிரைத் தந்திட.(சவமாய் அல்ல,சாகாமல் ஆம் நீவிதவையாய் சாகவிரும்பாத சத்ரியனாய்.)

அன்புடன் காத்திருக்கும்.
காவியன்.