Search This Blog

Saturday, May 05, 2007

என் ஜன்னல் வழி பார்வை.





























வேலையற்ற ஒரு வெள்ளிக்கிழமை-ஜன்னல்
வழி



வெறித்து
வேடிக்கை பார்த்தேன்
வெளியுலகை.



வெள்ளை சுடிதாரில் தேவதையாய் உன்னைக்
கண்டேன்.



வேகமாய் வெளியேறி தேரடி வீதி எங்கும்


தேடினேன் விழிகொண்டு.





பள்ளிக்கு பேருந்தில் பயணித்த போது ஒவ்வொரு
நாளும்



ஜன்னலோர இருக்கையையே நாடியது


உன்னை கண்டபின்னே-


‍எனது நண்பர்கள் மனம் போலவே.


ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காய்


உள்ளிருக்கும் அழகிகளுடன் தோற்று


ஓடிச் செல்லும் சாலையோர அழகிகள்.



கல்லூரிக்கு புகைவண்டியில் பயணித்தபோது


படித்த மெட்டுக்கள்-
கேட்டு, மலர்ந்த
மொட்டாய்,



மலர்ந்து இறங்கி மறைந்திடும் மங்கையர்
கூட்டம்



கண்டிடவே தினம் தேடியது ஜன்னலோர
இருக்கையை.





ஆனால்!
பெண்ணே உனக்கும் ஏனோ ஜன்னல் மீது
மோகம்.



ஆம் உன் மேலாடையிலும் ஜன்னல்கள்,


ஜடையோடு போட்டி போட்ட படி-


எனக்கு ஜாடை சொல்லிய படி .



ஆண் நான் ஜன்னலில் மோகம் கொண்டதால்,


உன்னுள் மோகம் நான் கொள்ள
கொண்டாயோ?!



ஜன்னலை உன்
ஜாக்கெட்டினிலும்.






எத்தனையோ எதிர் கொண்டேன் என்
ஜன்னல் வழி



பார்வையில்.ஆனால் பட்டபகலில்
ஒரு மின்னலாய்



உன் தேகம் சிதைத்தது போல
சிதைத்ததில்லை,



என்னை வேறொன்றும்.





வின்னில்
வீசிடும் மின்னல் கீற்று, நொடியில்



மறைந்திடும் கருமேகத்தினூடே.ஆனால்


உன் தேக மின்னல் மட்டும் மறைவதே இல்லை


உன் கருங்கூந்தல் மறைத்தும் கூட.

Thursday, May 03, 2007

நினைவுகள்






சின்ன வயசுல சைக்கிள்
கேட்டேன் -கிடைச்சது,

பைக் கேட்டேன்- கிடைச்சது,
கார் கேட்டேன் -காரும்
கிடைச்சது,

பதவி கேட்டேன்- பதவியும்
கிடைச்சது.

காதல் கேட்டென் காதலும்
கிடைச்சது.

அதுக்கு மேல
கல்யானம்கேட்டேன்.

எனக்கு கிடைக்கலை-உனக்கு
கிடைச்சிறுச்சி.

இப்படி எது கிடைச்சாலும் அதுக்கு மேல
தேடுற

மனசு உன் ஒருத்தி விசயத்துல
மட்டும்,

நீ மத்தவன் மனைவி ஆன
பின்னும்,

மன்மதன் மயங்கும் மங்கையரும் களிமண்
பொம்மைகளானது ஏனடி?


எழுதுகோலுடன் எழுதுதாள்,

காதலனுடன் காதலி,

பூக்களுடன் தேனீக்கள்,

வசந்தத்துடன் வாடைகாற்று,

வானத்துடன் வானவில்,

உடல்கள் கொள்ளும் உறவு,

உதிர்ந்தோடும் காலங்கள் என

எல்லாமே நினைவுகள் என்னும்

விதைகளை மட்டும் விட்டுச் செல்கின்றன,

விதைகள் மட்டும் விழுந்த வண்ணமாய்.