Search This Blog

Friday, September 22, 2006

என் தாயினும் மேலான காதலியே!!

வேண்டுமடி இன்னொரு பிறப்பு எனக்கு..உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திட அல்ல

உன் வயிற்றினில் கருவாய் தரித்திட. ஆமாம்

நடைபயிலையிலே கைவிட்டு நடக்க சொன்னாள் தாய். ஆனால்
நீயோ நடைபாதையிலே கைகோர்த்து நடக்க கற்றுத்தந்தாய்.

நா பேச எழாத போதும் அதிகம் பேச செய்தாள் தாய் ஆனால்
நீயோ நா துடிதுடித்தும் அதிகம் பேசாதிருக்க கற்றுத் தந்தாய்.

கிறுக்கிய போதெல்லாம் கிறுக்காதே என்றாள் தாய் ஆனால் நீயோ
கிறுக்கிய போதெல்லாம் கசக்காதே என கவிதை கற்றுத் தந்தாய்

காத்திருந்து கண்ஏங்கிய போதெல்லாம் காலத்தை குறை
சொன்னாள் தாய் நீ காத்திருந்த கணங்களின் வலிமை கற்றுத் தந்தாய்.

பள்ளியில் பலருடனும் பழகிட வேண்டாம் அவன் நட்பு என்றாள் தாய்
நீயோ பார்ப்பவருடன் எல்லாம் பழகச் செய்து நட்பினை கற்றுத்தந்தாய்

நான் மெதுவாக பேசிட சத்தமாய் பேசு என சத்தமிட்டாள் தாய்.ஆனால்
நீயோ பேசாமலே பதில் சொல்லிட மெளனமொழி கற்றுத்தந்தாய்

பழகியவன் பழித்திட கோபம் கொண்டதில் பெருமைகொண்டாள் தாய்
ஆனால் நீயோ கோபம் கொன்று பொறுமை கற்றுத்தந்தாய்

அழகான ஆடைகளாய் அணிந்திட செய்தாள் தாய்.ஆனால் நீயோ
நான் அணிந்த அழுக்காடையும் அழகாக்கித் தந்தாய்

தனிமையில் தாமரை ரசித்ததையும் மறந்து உறவுடன்
உலாவச் செய்தாள்ஆனால் நீயோ

'கலவரம் கார்கிலில் மட்டுமா! காதலர்களிடமும் தான்
அசைவுகள் கண்ட போதெல்லாம்' என கவிதை தந்தாய். இப்படி

எத்தனையோ கைக்கெட்டாத கவிதைகளாகி விட்டன உன்னுடன் கைகோர்க்கும் வரையில் அதனால் காதலியே!

வேண்டுமடி இன்னொரு பிறப்பு உன்மடியினில். இழந்த என் இறந்த காலத்தை இன்றுபோல கவிதையாக்கி களித்திட.

Tuesday, September 19, 2006

மாங்கல்யத்தின் மயக்கம்.

அவன் நினைத்தபோதெல்லாம் கழட்டிச்சென்றது தெரியும்
தாலியும் கழன்று கயிறு மட்டுமே இருப்பது தெரியாது

குடிக்க காசு இல்லையென்றால் அடிக்க தெரியும்
அடித்த சரக்கு இறங்கிய பின்னே அடித்ததும் தெரியாது

இவனின் குடல் எரிவது தெரியும்.ஆனால் அடுத்தவேளை
உணவுக்கான அடுப்பு அணைந்தது தெரியாது.

குடியின் குமட்டலில் வாந்தி வந்தது தெரியும்
குடியால் குடியின் சாந்தி போனது தெரியாது.

குடிக்காது உயர்ந்தவனின் உள்ளசேதி தெரியும்
பாதிதெரிய உடுத்தியிருக்கும் குடும்பத்தின் கதி தெரியாது.

குழந்தை பெற்றுகொள்ள தெரியும் .அவனை நல்விதமாய்
வளர்ப்பது அவளே சொன்னாலும் தெரியாது.

குடியில் குழந்தையை குபேரன் என்று சொல்லத் தெரியும்
குழந்தை கூலைத் தவிர எதும் உண்ணாதது தெரியாது.

அடுத்தவீட்டு குழந்தையின் பண ஆசைகள் தெரியும்
அவன்குழந்தையின் மன ஆசைகள் சொன்னாலும் தெரியாது.

குடியின் போதை குடலுக்கு நல்லதல்ல எனத் தெரியும்
குடியின் போதை குடிலுக்கு நல்லதல்ல எனத் தெரியாது

குடிக்ககூடாது என மனம் சொல்வது தெரியும்
விட்டுவிடும் வழி பணம் இல்லாத போதும் தெரியாது

குடியாலே இவன் இறக்கப்போவது தெரியும்.இவன் இறந்தபின்னே
பூப்பொட்டோடு சிரிப்பும் பறிக்கப் போவது பதட்டம் கூட தராது.

இப்படி இருந்தும்-இறந்தபின்னும் என்ன நடக்கும் எனத் தெரிந்தும்
தெரியாதது போலவே தான் தொடர்கிறது மாங்கல்யத்தின் மயக்கம்.


இது புரியாத புருஷன்களுக்காக புதுக்குடித்தனத்திலும்
தொடர்வதுஏனென்று தான் என் தாக்கம்.

புடித்த வாழ்க்கையில் வாழ்வை பிடித்து கொண்டவை

காலையில் கடமைக்கு செல்ல கண்விழிக்க பிடிக்கலை.

விழித்து குளித்துமுடித்து செல்லையிலே பிரிவு பிடிக்கலை.

பேருந்தில் பயணஞ்செய்யையிலே நெரிசல் பிடிக்கலை.

நெரிசலில் உருவாகும்வியர்வையும் சட்டைசுருக்கங்கூட பிடிக்கலை.

நேரத்தில் சென்றாலும் சிடுசிடு என்றிருக்கும் முதலாளி பிடிக்கலை.

மணமானவன் எனத் தெரிந்தும் வலைவிரிக்கும் மாதை பிடிக்கலை,

தொடங்கையிலே வரும் தொல்லை அதைத் தருபவர்களை பிடிக்கலை,

ஆசையாய் அன்பானவள் கட்டிகொடுத்த சாப்பாடும் ஆறியதால் பிடிக்கலை

வேலையை முடித்து திரும்பயிலையே மனைமக்களுக்கு இனிப்பு வாங்கமுடியாத நிலையில் இருப்பது பிடிக்கலை.

உழைத்து முடித்து களைத்து திரும்பையிலே தெருவில்
கிளம்பும் புழுதியும் புடிக்கலை.

புத்துணர்ச்சி என புகைப்பிடிப்பவன் விடும் புகையும் புடிக்கலை.

மனை வந்தவுடன் மகிழ்ச்சியை மகிழ முடியாமல் களைப்பு
கண்இணையச் செய்வது புடிக்கலை.

இப்படி தினம்தினம்பிடிக்காத இத்தனை நிலை கடந்தும்- கண்டும் ஏனோ வெளியில் சொல்லமுடியாத நிலை பிடிக்கலை.

ஆனாலும் ஏனோ தெரியவில்லை.வாழ ரொம்ப பிடிச்சிருக்குஎன்றுதான் சொல்லிக்கொள்கிறேன் எவர் கேட்டாலும்.