Search This Blog

Wednesday, March 28, 2007

உன் நினைவென்னும் சிலுவை






உண்மைக்கு உதாரணமாய்
அரிச்சந்திரனை

சொல்லிடும் இந்த உலகிலே , அந்த
அரிச்சந்திரனுக்கே

உதாரணமாய் என்னைத் தானடி
எடுத்துக் காட்டினர் எனது
ஊரினர்.





என்று உன்னைக் கண்டு "நீ தான்
எனது தேவதை" என்று

சொன்னேனோ அன்று முதலே எனது
நாவினிலே

நவரசமாய் பொய்கள் உன்னை
சேர்ந்திட,




உழைப்பே உயர்வு தரும் என்பதே
வேதமாய்

கொன்டு எறும்பு போல
இருந்தேனடி, என்று உன் பிரிவை

இரவில் உணர ஆரம்பித்தேனோ அன்று
முதலே

சூரியன் மறைந்ததுமே
மறுநாள் விரைவில் விடிந்திட

வீம்பாய் கண்களை இறுக்கி மூடிக்
கிடந்த முட்டாளடி நான்.




திருடனை கண்டால் காறி
உமிழ்ந்து சென்றவனடி

என்று என்னை திருடா என
அழைத்தாயோ

அன்று முதல் எனக்கு திருடன்
என்கிற

வார்த்தையே
அழகானதடி.



என் அண்ணன் என்னைபொறுக்கி போல
சுற்றித்

திறிகின்றேன் என்றதுக்கே பொசுக்கி எறிந்திட

துணிந்தவனடி நான்,ஆனால் நீஎன்னை
பொறுக்கி

என்ற போது மட்டும்
ஆயிரம் கோடி பேரில்

உன்னைபொறுக்கி எடுத்த
பாக்கியவான் என்றிருந்தேன்.






நீதிக்குப் பெயர் பெற்ற
மனுநீதிசோழனுக்கே

மாஜி மந்திரியடி நான்.ஆனால்
இப்போதெல்லாம் உனக்கு

மட்டுமே சாதகமாய்
சாட்சி சொல்கிறேனடி.





நல்லவனாய் தானிருந்தேன் உன்னை
கண்டிடும்முன்னே

திருட‌னாக்கினாய்‍-திமிரு
கொண்டேன்.

பொய்ய‌னாக்கினாய் - பொறுமை கொண்டேன்

பொறுக்கியாக்கினாய்- பொறாமை
கொண்டேன்

சோம்பேறியாக்கினாய் -க‌ன‌வினில்
மித‌ந்தேன்

வ‌ஞ்ச‌க‌னுமாக்கினாய் -வாழ்வை
உண‌ர்ந்த்தேன்

மற்றவனோடு மணம் கொண்டு,

என்னை மரணத்தில் அலைய
விட்டாயடிஉன் நினைவென்னும் சிலுவை சுமந்து.