Search This Blog

Wednesday, July 25, 2007

உன் அப்பனுக்கு மரியாதை



சாலையோர சிலைகளும் உன்னுடன்
கைகோர்த்து நடந்திடும் உத்தியில்
உயிர்கொள்ளும்.

உன் விரல்களை நான் பற்றி
நடந்திடுவதால்

சிலைகள் சிலைகளாகவே.








தோட்டத்து மலர்களும் கால் முளைத்து
செடி உதறி கீழே உதிர்கின்றன
உன்னை தொடர்ந்திட
துணிந்து.









நடுக்கடலில் எங்கோ தொடராய்
கிளம்பிய

அலைகளும் ஏமாந்து செல்கின்றன
தோல்வியில்,

உன்னுடன் நான் கைகோர்த்து
நடந்து வருவதால் .






விண்விட்டு இறங்கிய
வின்மீன்களும்

இடையினில் என் கைகள், உன் இடை பிடித்து
நடப்பதை கண்டதாலே காணாமல்
போய்விட்டது









இப்படி உன்னுடன் தொடர்ந்து நடந்து வர
விரும்பிய அனைத்தும் அலறியடித்து
ஓடின

உன்னுடன் என்னை
கண்டதால்.

ஆனால் நானே அலறியடித்து
ஓடுகிறேன்

உன் அப்பனை
கண்டவுடன்.

காதலோடு இறந்தால்











உன் புன்னகையில் தொலைந்ததால்
என் புன்னகையை
தொலைத்தவனானேன்.



உன் கண்களில் காதலை கண்டதால்
என் கண் பார்வையை இழந்தவனானேன்.


உன் சிற்றிடையின் அகலம் அறிந்ததில்
எண் கணித நீள அகல விகிதம் மறந்தவனானேன்.



உன் கூந்தல் பாயில் படுத்திருந்த‌தில்
என் ஆயுள் பாதி இழந்தவனானேன்.




உன் பார்வை பட்டதால் பறந்த நான்
இறகுகள் கிள்ளியதை அறியாதவனானேன்.



உன் கண்களில் நீர் கசிந்ததால்
அழகு மழையும் ரசிக்க கசந்தவனானேன்.



உன் உடன் இருந்த போது இழந்ததை
எண்ணி அழவில்லை ஒருநாளும்.


நீ உன் மாமன் மகனுக்கு தான் என
பெற்றோர் உயில் சொல்வதாய் சொன்னபோதே
என்
உயிரும் போய்விட்டது.




இனி இழந்திட ஏதுமில்லை வாழ்வில் .
நான் கர்ணன் ஆகவும் பிறக்கவில்லையடி,
கவச
குண்டலம் கூட இல்லையடி என்றேன்.


என்னை கர்ணன் ஆக்கி,
காதலை கவசகுண்டலமாக்கி
காதலை கொடுத்திடு என்றாய்.
நானும் கொடுத்து விட்டேன்.
நீயும் எடுத்து செல்கிறாய்.
எடுத்து செல்வது என் உயிர்
என தெரியாமலையே.
காதலோடு இறந்தால் காதலித்தவன்
எல்லாருமே கர்ணன் தான்.