Search This Blog

Sunday, January 07, 2007

உனக்காக ஒரு வரம்



அகத்தியன் இருந்திருந்தால் அவனிடம் ஒரு சொல்
கேட்டு இருப்பேன் தமிழில்.
எனது அன்பை நீ உணர்ந்திட .

சாணக்யன் இருந்திருந்தால் அவனிடம் ஒரு தந்திரம்
கேட்டு இருப்பேன். எனது அன்பை நீ உணர்ந்திட.

சத்ரியன் இருந்திருந்தால் அவனின் உயிரினை
கேட்டு இருப்பேன்.உனக்காக இறக்காமல்
என் அன்பை நீ உணர்ந்திட .

கொலம்பஸ் இருந்திருந்தால் அவனிடம்
ஒரு அழகிய தீவுகேட்டு இருந்திருப்பேன்.
எனது அன்பை நீ உணர்ந்திட .

மனுநீதி சோழன் இருந்திருந்தால் அவனிடம் நீதி
கேட்டு இருந்திருப்பேன். நீ நிம்மதியாயில்லை என
என்ன செய்ய ! உன் அம்மா தான் இருக்கிறாள்.
அவளிடம்என்ன கேட்க? ஒன்னே ஒன்னுதான்
கேட்டேன் அதுவும் உன்னையே தான் கேட்டேன்.

நீ என் அன்பை உணர்ந்து கொள்ள அல்லடி.
உன்னை நீ உணர்ந்து கொள்ளத் தானடி.