Search This Blog

Monday, July 09, 2007

சகலமாய் நீ வாழ







ஆறு ,ஏரி,கம்மா என நாம சுத்தித் திரிஞ்ச

இடமெல்லாம் என்னோட கண்ணீரால

நிரம்பி போச்சுடி கொதிக்கிற‌ கோடையிலும்
கூட

பாதியில‌ விட்டுபுட்டு ப‌ரிஸ‌ம் போட்டு
ம‌றுவீடு போன மாம‌ன் ம‌வ‌ளே உன‌க்கு

ம‌ட்டும் வ‌யிறு நிற‌ம்பிப் போச்சுடி
நான் வாடையிலும் கூட‌
ப‌ய‌புள்ள‌ நீ வ‌ந்த ப‌ச்ச‌ வ‌ய‌
ம‌ன‌சு
த‌றுசா தான்டி போச்சு உன்
நினைவூத்துச் சொற‌ந்த‌
போதும்
நெஞ்சுகுள்ள‌ வாரிசும்கூட வ‌ந்தாச்சு
நான் உன்னைய திரும‌ண‌ம்
செஞ்சிகிடாத‌ போதும்

யார‌டிப் புள்ள‌
குத்த‌ஞ்சொல்ல?

உன்னையா? இல்லை
என்னையா?

இல்லை உதிர‌ம் சுண்ட‌
சுண்ட‌

உற‌வுக‌ள்
குறைந்த‌தையா?
ம‌டியில‌ த‌லவெச்சி
கெட‌ந்த‌ப்ப‌வே
பாவிம‌வ‌ நீ,
கெஞ்சிக்கேட்டும்

த‌ந்திட‌ல‌ உன‌க்கொரு
ம‌ஞ்ச‌க்க‌யிறு

தாலிகொடி கேட்ட‌
உன‌க்கு ஒரு கொடில‌
ம‌ல‌ர்ந்த‌ ம‌ல‌ர் ஒட்டி
உற‌வாட கொடி

ஒன்னும் தேவையில்லடி

காற்று போதும் உரசி
உறவாட என்றேன்.
அது செடி கொடிக்கு சரி மச்சான் ஆனா
பாலாப்போன மனுச சாதிக்கு

கயிறு தான் முக்கியம்னு சொல்லிப்புட்டு

கயிறு தந்த பங்காளி பயலோட நீ போயிட்ட.

நீ சொன்னதாலையே என்னவோ

புலம்பலை எழுதி காத்துல விட்டுபுட்

உன் கழுத்துக்கு கொடுக்காத கயிறை

என் கழுத்துல கட்டி இடுகாடு போறேன்டி

இன்னோரு ஜென்மம்தேடி
சகலமா நீ வாழ‌
நான் சாகுறேன் சாதியால‌