Search This Blog

Wednesday, August 22, 2007

ஒரு முடிந்துபோன த‌லைமுறைத் தாயின் க‌டைசி ஆசை.


ந‌ண்ப‌ர்க‌ளே என் த‌லைமுறைக‌ளே! இது ஒரு தாய் என்னுள்
விட்டுச் சென்ற‌ க‌ண்ணீர்த் துளியின் ஒரு சொட்டு.
அவ‌ள் சிந்திய‌ க‌ண்ணீர் துளிக‌ள் க‌ட‌லையும்
ம‌ட்ட‌ப்ப‌டுத்தும்.அவ‌ள் சிந்திய‌ துளியில்
தெரித்த‌ என் சிந்த‌னைத் துளிக‌ள்.


என் பாட்டியின் பாட்டி, என்
பாட்டிக்கு கதை சொல்லி
உறங்க வைத்து அவளும் உறங்கிப்
போனாள்
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் பாட்டிக்கு, என் பாட்டியின்
தாய் தாலாட்டு பாடி,
சீராட்டி அவளும் சீராய் இருக்க
மறந்ததில்லை
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் தாய்க்கு என் பாட்டி கதிர்
அறுத்து,
அரிசி குத்தி அழகாய் சமையல்
செய்து
அவளையும் சமைந்திடச்
செய்தாள்
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
இன்றும் அதே
இருபத்திநான்
குமணிநேரம்தான்
ஆனாலும் தாலாட்டு இல்லை,தாய்ப்பால்
இல்லை
அவ்வளவு ஏன் குழந்தையே வீட்டில்
வளர வில்லை
.
காப்பகத்தில் பாதுகாப்பாய் வளர்ந்த
குழந்தை,
படிப்பு மட்டுமே பெற்றது பாசத்தை
இழந்து,
பண்டிகை தேதிகளில் மட்டுமே பாசத்தை
பெற்றது,
கடைகளில் வாங்கிய இனிப்பு
காரங்களுடன்
கைகளில் திணிக்கப்பட்ட
இரு நூறு ருபாய்
தாள்களில்.
தாய் தந்தை அறியவில்லை
முந்தைய
பண்டிகையின் போது திணிக்கப்பட்ட
தாளே
கசங்காமல் கணக்குப் புத்தகத்தில்
புதிதாய் புதைந்து
கிடப்பதை.

வளர்ந்த குழந்தைக்கு தோழன்
இல்லை,
தோழியும் இல்லை,தம்பி
இல்லை,
அண்ணன் இல்லை தனிமை
மட்டுமே
துணையாய் நாள் ஜந்தும்
விடுமுறை என வீடு வந்தால் அண்டை
வீட்டுக்காரனிடம் பழகிடவும் அனுமதி
இல்லை,
அது ஆணாக இருந்தாலும் சரி,
பெண்ணாக இருந்தாலும்
சரி.
தொலைகாட்சிப் பெட்டி மட்டுமே
துணையானது பகல்வேளை
முழுதும்.
தொடர்கள் பாசத்தின் ஏக்கம்
கூட்டிட,
அண்டை நாட்டு
அலைவரிசகள்
ஆசை தூண்டின.பாடல்கள்
மாறின.
ஆங்கிலத்தில் அசிங்க‌மான வ‌ரிக‌ளை
கொண்ட‌ பாட‌ல்க‌ள் ப‌க‌ல் முழுதும்
ஒலித்த‌ன‌
பாடிய‌ போது கைத்த‌ட்ட‌ல்
கிட்டிய‌து
வ‌ரிக‌ளின் வ‌ன்ம‌ம்
ம‌ற‌ந்து.
எல்லாம் மாறி மாறிப் ப‌ழ‌கிட‌
த‌னிமை ம‌ட்டுமே இவ‌னுக்கு
தேவையான‌து
உட‌ன் பெண் இல்லாத‌
போதும்
பெண் உட‌ன் வ‌ந்த‌ பின்னே
தாய்
த‌ந்தைய‌ரும் தேவையில்லை
என்றான‌து.
அன்று ப‌ண்டிகைத் தேதிக‌ளில்
பிள்ளைக‌ளை
பார்க்க‌ச் சென்ற‌ன‌ர்
பெற்றோர்க‌ள்.ஆனால்
இன்றோ பாடையில் சென்றிடும்
வேளையிலும் பிள்ளைக‌ள் செல்வ‌தில்லை
ப‌ணம் ம‌ட்டும் அனுப்ப‌ப‌டுகிற‌து
ஒரு அனாதைப்
பிண‌த்திற்கு.
முதியோர் இல்ல‌ங்க‌ளில் இன்ன‌மும்
ஒலிக்கின்ற‌ன‌ ,காணாம‌ல் போன‌
தாலாட்டுக்க‌ள்
ஒப்பாரிக‌ளாய்.
ஆனாலும் கூட‌ இன்றும்
அனும‌தி சீட்டு வாங்குவது
குறையவில்லை என்றோ
முதியோர் இல்ல‌த்தில்
கைவிட்டுச்
செல்ல‌ப்போகும்
பிள்ளைக‌ளுக்காக‌.