Search This Blog

Saturday, October 28, 2006

மையால் மெளனமான மனம்


























  1. நீ காற்றானதால் நான் உன்னை
    மட்டுமே
    சுவாசிக்கும்
    புல்லாங்குழலாய்.


    வானமும்
    வறுமையில்!
    நிலவில்
    பாதியை காணவில்லை!

    உன்
    நினைவுகளில் என்னை
    உருக்கிக் கொண்டு- காதல் என்னும்
    வெளிச்சத்தில் கனவு
    என்னும்
    இருட்டிலேயே!மெழுகுவர்த்தியாய்.


    சிரிப்பிலே உண்மை எது?
    குழப்பத்தில் நான்.
    பைத்தியம்
    கண்டு சமுதாயமா?
    சமுதாயம் கண்டு பைத்தியமா?

    தீக்குச்சிகள்!முடிந்தவரை இருட்டோடு
    போராடும் போராளிகள்.

    புற்களை கிள்ள கிள்ள
    கிளர்ந்தெழுகிறதே!
    மண் மேல் காதலோ!


    உன்னை தேவதை என்றதால்
    தேவதாஸ் ஆனவன் நான்

    பாலையிலே ஒரு சோலை!
    கனியோடும் மலரோடும்
    கள்ளியும் கற்றாழையும்
    கைகோர்த்தபடி!

    வாழ்வை மற்றவர்களுக்காவே
    வாழும் தியாகி
    விருப்பம் இல்லையெனினும் மற்றவன்
    பொருளையும் விழுங்கிடும் கயவாளி

    இரவு நேர உழைப்பின் களைப்போ
    புற்களுக்குபனித்துளிகள் வியர்வையாய்