Search This Blog

Friday, October 20, 2006

தென்னை சொன்ன செய்தி

மண்ணில் மறைத்து வைத்தேன் ஒருநாளில்
மழையில் மலர்ந்து- வளர்ந்து நின்றது
பின்நாளில்


பாலையோடு பூத்து குலுங்கினாய் பற்கள் பலகாட்டி
உன்னை ருசித்திட
எங்களுக்குள்ளே போட்டி


இளநீர் தந்து எங்கள் சோர்வை துடைத்தாய்
நற்காய்கள் தந்து உணவில்
ருசி கூட்டினாய்


காய்ந்ததால் பணம் தரும் எண்ணெய் ஆனாய்
கீற்றோலை தந்து குடிசையின்
குறை மறைத்தாய் கூரையாய்
பாலை தந்து விறகானாய்
பழுத்ததால் பரிமாணம்
கண்டாய்
விழுந்ததினால் வீட்டினில் விட்டம் ஆனாய்


இப்படிவிழும் வரையில் தவனைமுறையில் தருகின்றனவே
தண்ணீரை வட்டியோடு
தென்னைகள்.



தென்னைகளேஉங்களிடம் இல்லையோ
ஏமாற்றிச் செல்லும் குணம்.ஆகவே
ஆரம்பிக்கப்படுமா?


சீட்டுக்கம்பெனிகள் தென்னைமரங்களால்!
சிதறிச் சென்ற
சிறுசேமிப்பை சீர்படுத்திட!