Search This Blog

Friday, June 29, 2007

காதல்-கத்திவெட்டுஅல்ல-அது கல்வெட்டு







ஊரினில் உள்ள வாலிப பட்டாளமே
பின்
தொடர்ந்திடும் கட்டழகி நீயடி.ஆனால்
நானோ பறந்திடும் காகமும் கறைந்திடும்
தன்
இனமோ?! இவன்! எனுமளவு கருப்புமண்ணு .

என்மீது எப்படியடி காதல் கொண்டாய்
என்றேன்.
ஒன்றா? இரண்டா? எதனைச் சொல்ல,
எப்படிச் சொல்ல
என்றாய்?
ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தேன்
என்றேன்

வாலிப பட்டாளமே என் பின்னே வர
நீ மட்டும் முன்னே
நடந்தாயே பாராமல்,
அதனை சொல்லவா என்றாய்.நானோ
சில்மிசத்தோடு சிரித்தேன்
கோபமாய் வினவினாய் காரணத்தை.

உன் பின்னே நடந்து வந்தால் உன் பின்னழகில்
மயங்கி மதியற்ற கற்பனையில் காமத்துப்பாலில்
வள்ளுவரிடம்
வாக்குவாதம் கொண்டு உன்
பின்னழகுக்கு இன்னுமொரு அத்தியாயம்
கேட்டு
இறந்தவன் கையில் என் எழுத்தானி
தினிக்கிறது
என்றதும்,புரிந்ததோ-‍புரியலையோ,
புரிந்தும் புரியாத
மாதிரி கோலம் போடுவதற்கு
பதிலாய் விரலால் கோடுகள்
தீட்டினாய்

உனக்கு முன்னமே நடந்து சென்றிட்ட நேரம்
என்
பாதம் முள் தைத்திட பதறிப் போய்
பார்த்து நடந்திட கூடாதா என்றாய்?
பார்த்து
தான் நடந்தேன். நீ என் பாதச்சுவடு
மிதித்து நடந்து வருவதை,
என்றதும்
பைத்தியம் போல வழிந்தாய்

பள்ளி செல்லும் போதும் சரி,பேருந்து ஏறிட,
நீ ஏறிச் சென்றிடும் பேருந்துக்கு முன்னமே ஏறி,
நீ ஏறிடும் நிறுத்தம் தாண்டி
இறங்கி- நீ ஏறிடும்
பேருந்துக்காக காத்திருந்திருக்கிறேன்
காலை
வேளைகளில்

ஜன்னலோரம் அறிந்த பாவைகள்
அமர்ந்திருந்தும் கூட
அளித்ததில்லை.
நான் கொண்டு வரும் புத்தகத்தினை.ஆம்
புத்தகம் முழுதும்
புதைந்திருப்பாய்
நீ உன் பெயரால

தியேட்டருக்கு சென்றிடுவாய்
திருட்டுதனமாக-
தோழிகளுடன், தோழிகள் தொல்லை
என
நினைத்தவாறு.

புரிந்தும் படம் பார்க்காமல் பார்வை
பரிமாறுவாய்.
நானோ புரியாத படத்தினை புரிந்தவன் போல
கற்பனை
கொண்டு பரிமாறிய பார்வையொடு
பாரிஸில் இளைப்பாறி இருப்பேன்
.
திருமணத்துக்கே சென்றிடாதா
செல்லாக்காசு நான்.
நீ ஒரு ஞாயிற்றுகிழமை திருமணத்துக்கு
சென்றிட யாரென்றே
அறியாதவர் திருமணத்துக்கே
ஜிவ்வென கிளம்பியவனுக்கு ஜாக்பாட் அடித்தது.ஆம்
அன்று தான் என்னை பலநாள் பழகியவன் போல
உன் தோழியிடம்
அறிமுகம் செய்துவைத்தாய்.
எனக்கே தெரியாமல் எத்தனையோ முறை
வாழ்த்தி
இருக்கிறேன் அந்த தம்பதிகளை.

உனக்கென நான் என‌ ஆன பின்னே
தொடர்ந்த
வாலிப கூட்டம் வழிவிட்டு விலகி நின்றது,
மச்சக்காரன் நான் என மனதில் கருவியபடி

எப்படியடி என்னை இத்தனை நாளாய்
மனதில்
மறைத்திருந்தாய் என கேட்டேன்.
நீயோ மெளனம் காத்தாய்.
பதில்
இல்லாத வருத்தத்தில் மெல்லமாய்
புல்லாங்குழல் எடுத்து ஊதினேன்
என்
குழல் இசை கேட்டு தென்றலும் ஓடி வந்திட
விலகிய உன்
தாவனியில் என் விடை கிடைத்தது
ஆம் மெல்லிய நூலாடையில் இருமலைகளை
மறைத்திருக்கும் உனக்கு இம்மலையை
மறைத்திருந்ததில்
வியப்பென்ன
!

மணி நேரம் குளித்துப் பழகிய நாம்,
நம்
கடவுளின் வரவால் ஒரு பத்து நிமிடம்
கூட குளிக்காமல் மணிக்கணக்கில்
மறைந்திருந்தோம் குளியலறையில்
தண்ணீர் திறந்துவிட்டபடியாய்

சோப்பு மறக்காமல் எடுத்து செல்வோர் மத்தியில்

செல்போன் எடுத்து சென்று
காக்கை இனமானோம் குளித்திடும்
முறையினால்

கடவுள் கண்டாலே கேள்வி கேட்டிடும்
பெரியார்
வழிவந்த திராவிடன் நான்
காதல் வந்ததில் கடவுளை கண்டவன்
ஆனேன்
கிரஹாம் பெல் கடவுள் ஆனார்.
அழைப்பு மணி ஆலயமணி
ஆனது
.வரும் அழைப்பு உனதானதால்
அது கடவுளின் குரல்
ஆனது.




எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம்
பெற்றோர்களை,
எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம் நண்பர்களை,
எப்படி தோன்றுமோ
தெரியவில்லை
எண்ணங்கள் நமக்குள்ளே
எல்லோரையும் ஏமாற்றினோம்
ஏமாறுகிறோம் எனத் தெரியாமலையே
இதயத்தை திருடிட திருட்டினை கற்று கொண்டேன்
பேசாது
தொடர்ந்த நாட்களில் பொய்
பேச கற்றுகொண்டேன்
கற்று கொண்ட எல்லாமே
மறந்து
போயின காதல் வந்த பின்னே


காதல் வந்த பின்னே சொந்தமும் மறந்தது
பந்தமும்
மறந்தது கல்யானம் வந்த போது
ஏனோ காதலும் மறந்தது‍ கூடவே
காதலனும் மறந்துபோயினான் அவளுக்கு

அவளின் கல்யாணத்தின் போது மறைத்த
காதல்
மட்டும் மறக்க முயன்றும் முடியாமல்
மண்டிக் கிடக்கு மலை போல
மனதுக்குள்ளே


கவிதைத்தாள் தானேன்னு கசக்கி
எறிய
முடியவில்லை
கத்தி வெட்டுன்னு மருந்தும்
போட முடியவில்லை
முறிஞ்சி
போன காதல் கவிதையுமல்ல
கத்திவெட்டுமல்ல‌ அது கல்வெட்டு.
காதலி
மண்ணோடு மடிந்த பின்னும்
தோண்டி எடுக்கப்படும்
நினைவுகளால்
.