நீ சுற்றி வலம் வந்த கோயில் பிரகாரம்-
உடன் சுற்றி வந்த போதே,
உலகையே சுற்றிய உணர்வோடு உட்கார்ந்து
ரசித்த போது தான் உணர்ந்தேன்.
ஏன்? எல்லா தெய்வங்களும்
வெவ்வேறு இடங்களில்,
வெவேறு திசைகளில் இருக்கின்றன,
ஓ அவைகளும் உன்னை காதலிப்பதாலா?
கடவுள் மட்டுமல்ல, கன்னிகளும்
காதல் கொள்ளும் காந்தாரம் நீயடி.
நீ மன்னில் வந்த பின்புதான்
பென்னினம் இரட்டிப்பானது. ஆமாம்,
உன்னைப் போல ஒருத்தியை படைத்திட
முயன்று பிரம்மன் தோற்றுப் போனதால்.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Saturday, June 09, 2007
இரண்டானது பென்னினம்
நீ கடலுக்கு சொந்தக்காரி
ஆயிரம் அழகிகள் அரைகுறையாய்
அலைகளுக்காக ஏங்கி, ஓடி ஓடித் தேடிட-
உன் ஒருத்தி வரவில் மட்டும்,
சுனாமியாய் அலைகள் பொங்கி கரை வந்து,
உனக்கு பாத பூசை செய்து
கண்ணீர் விட்டு கரைந்து செல்கின்றனவே.
ஏன்?என கடல் உற்று நோக்கினேன் வெகுநேரம்.
கண்ணீர் சிந்தியது கண்கள்-
வெகுநேரம் உற்று நோக்கியதால்.
ஓ!என்போல உன்னை காதலித்தவர்களின்
சிந்தனைத் துளிகள்தான் கடல்நீரானதோ.
இந்த துளிகள், சிந்தனைத்துளிகள் அல்ல,
என் கண்ணீர்த் துளிகள்.
கடலில் கலந்திடவிடாதே.
நானும் கரைந்து விடுவேன்.