Search This Blog

Saturday, June 09, 2007

நீ கடலுக்கு சொந்தக்காரி










ஆயிரம் அழகிகள் அரைகுறையாய்
அலைகளுக்காக ஏங்கி, ஓடி ஓடித் தேடிட‌-



உன் ஒருத்தி வரவில் மட்டும்,
சுனாமியாய் அலைகள் பொங்கி கரை வந்து,



உனக்கு பாத பூசை செய்து
கண்ணீர் விட்டு கரைந்து செல்கின்றனவே.



ஏன்?என கடல் உற்று நோக்கினேன் வெகுநேரம்.
கண்ணீர் சிந்தியது கண்கள்-
வெகுநேரம் உற்று நோக்கியதால்.



ஓ!என்போல உன்னை காதலித்தவர்களின்
சிந்தனைத் துளிக‌ள்தான் க‌ட‌ல்நீரான‌தோ.



இந்த துளிகள், சிந்தனைத்துளிகள் அல்ல,
என் கண்ணீர்த் துளிகள்.
கடலில் கலந்திடவிடாதே.
நானும் கரைந்து விடுவேன்.

No comments: