Search This Blog

Thursday, May 17, 2007

என்னருகே நீ இருந்தால்

கோடையில் நீ நடந்திடும் வீதிக்கே
விசிறிகட்டி உன் நிழலுக்கும்
குளுமை தந்திடுவேன்.




மழைகாலத்தில் நீ நடந்திடும் நேரம்
மழைத்துளி மண்விறைந்து உன்மீது
சிதறுண்டால் விண்ணையே
சிறைவைப்பேன் உன் கூந்தலில்.





குளிரில் நீ நடுங்கிட நேர்ந்தால் அந்த
சூரியனையே இரவிலும் விழித்திருக்க
வைத்து சூரியனுக்கே தண்டனை
அளிப்பேன்உன் வேல்விழி வாங்கி .




இவை அனைத்தும் சாத்யமா! சாமன்யனே?
என கேட்காதே. என்னருகில் நீ இருந்தால்,
அரபிக் கடலும் கூட ஆறு அடி ஆழம்தான் எனக்கு.



No comments: