Search This Blog

Friday, September 29, 2006

கடல்தாய்

எத்தனையோ நாளாய் அழைத்திருந்தேன் விருந்துக்கு- உன்னை!
கடல்தாயே கைநிறைய காசு கண்ட வேளையெல்லாம்
கை தொழாத நிமிடங்கள் இன்னமும் நினைவில் உண்டு
நீ தொட்டுச் சென்ற கரைகளில் கட்டித் தழுவி
இருக்கின்றேன் தாரத்தை உன் தயவில்.
என் தாரமானவள் தாயானபோதும் உன்
ஆசிவேண்டியே அழுதிருக்கிறேன் கரையில்
களித்திருந்த வேளையெல்லாம் கருவில் இருக்கும்
குழந்தைக்கு கடலரசன்-கடற்கன்னி என உன்வாரிசாக
எண்ணித்தானே எழுதிவைத்தேன் நேற்றும் கூட.
அலையனுப்பி அலைத்துச்சென்றபோதெல்லாம்
தழுவிச் சென்றதாய் தாண்டவமாடியதுன்டு. ஆனால் இன்று
வீடுதிரும்பிய பின் தான் உணர்ந்தேன் அலைத்துச் செல்லவில்லை- அழித்துச்சென்று விட்டாய் என்று் -
தாயே உறவு கொன்ற கொடுமையை யாரிடம்

No comments: