Search This Blog

Friday, September 29, 2006

உப்பானது ஏன்?


கடல்நீர் உப்பானது ஏன்? எத்தனையோ நாள்
யோசித்திருந்தேன் கரையிலமர்ந்து
அலைகள் ரசித்தவண்ணமாய்.

விடையில்லை. ஆர்வம் வந்தது.

எழும்பி வந்து உயிர் எடுத்துச் சென்ற
அலை உணர்த்தியது.
அலறி உயிர் விட்டவர்கள் கண்ணீருடன்
எஞ்சியோரும் சிந்திய கண்ணீரால் என.

விடையில்லாத போது ரசித்த நான்.
விடைகண்டபோது மரித்தேன்.

No comments: