Search This Blog

Friday, September 29, 2006

சுனாமிச் சிதறல்கள்

26.12.2004 விடியற்காலை இது
எத்தனையோ பேருக்கு விடியாத காலை.

கதிரவன் வரவை கண்டிட காத்திருந்த கண்கள்,

காற்றுடன் அலையின்ரீங்காரம் ரசித்திருந்த காதுகள்,
இளங்காற்றை எதிர்த்து ஓடி இளைப்பாறியஇதயங்கள்,

நண்டுகளை அலையுடன் துரத்தி விளையாடிய மழலைகள்,
இரவுநேர உணவுக்காக வலைவீசி கலமேறிய மீனவர்கள்,
கடலை தொட்டியாய்நினைத்து குளித்திடும் கடற்கரைவாசிகள்,
காதலை வாழவைக்க பலசமயம் மறைக்க
உதவிய படகுகள்,
எரிகிற கதிரவன் முன்னே எரியாத அடுப்போடு போராடும்தள்ளுவண்டிக்காரன்- என இவைகளோடு அன்றி
அன்று தான் அப்பாவுடன் புதிதாக வந்த அந்த குழந்தையும் கேட்டது மகிழ்வுடன்
இதுபோல விடியல் தினம் வேண்டுமென!!
மகிழ்ச்சிமுடியுமுன்னே மடித்து
அடித்துச்சென்றாயே
அலைகளை அனுப்பி. எங்களின் கண்ணீர் அலைகளோடு
இல்லையில்லை- எங்களின் கண்ணீரோடு ஒப்பாரி
வைக்கிறோம் வேண்டாம் இப்படி ஒரு
விடியல் என..
அதுமட்டுமல்ல இனி எங்களுக்கு கண்ணீரால்
வரும் அலை கூட
வேண்டாம்.

No comments: