நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Saturday, September 09, 2006
நீயும்-நானும்
காலையில் என்னை கண்ட கதிரவன்
கேட்டது,ஏன் சேவல் கூவவில்லை?என அல்ல.எங்கே நிலா என்று.
காவேரியில் நீராட சென்றேன். காவேரி கேட்டது, எங்கே எனக்குவரி?
என அல்ல.எங்கே என் தங்கை கங்கை என்று.
பள்ளியில் ஆசிரியர் கேட்டார்,பாடம் படித்தாயா? என அல்ல.
எங்கே களஞ்சியம் என்று.
கோயிலில் குருக்கள் கேட்டார்,எங்கே தட்சனை? என அல்ல
எங்கே மகாலட்சுமி என்று.
ஐஸ்கிரீம் கடைகாரன் கேட்டான்,என்ன வேண்டும்? என அல்ல
எங்கே வெண்ணிலா என்று.
கடற்கறையில் சுண்டல் விற்பவனும் கேட்டான்,சுண்டல் வேணுமா?
என அல்ல.எங்கே கடற்கன்னி என்று.
உணவுவிடுதியில் பரிமாளனும் கேட்டான்,என்ன சாப்பிடுகிறாய் என அல்ல.எங்கே அன்னலட்சுமி என்று.
கல்லூரிக்கு சென்றேன்,கண்டவனும் கேட்டான்.எங்கே வேலைசெய்கிறாய்?என அல்ல.எங்கே கண்ணகி என்று.(நீ கற்புக்கரசியாச்சே)
மரத்தடியில் அமர்ந்தாலும் உதிரும் இலைகளும் கேட்கின்றன,எப்படி இருக்கிறாய்? என அல்ல.எங்கே தென்றல் என்று.
இப்படி நான்எங்கு சென்றாலும் உன்பெயர் சொல்ல
எத்தனையோ உண்டு.என் தாடியோடு ஜோடியாய்.
எனக்கு தெரியும் ப்ரியா என நீ கொண்டபெயரால் தான்
பிரியாமல் பிரியமாய் இருக்கிறாய் பிரிவினையிலும்.ஆனால்
உனக்கு உண்டா? என் நினைவு ஒரு காவியமாய் இல்லையானாலும் ஒரு ஹைக்கூ கவிதை போலாவது!!!
உன் நினைவுகளோடு,
காவியன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment