நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Thursday, September 07, 2006
விடை தருவாளா?
அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளம் கவிஞனுக்கு கரு கிடைத்த களிப்பு,
ஆனந்தமாய் விழும்அருவியின் ஓசை இசையமைப்பாளனுக்கு
சுதிகிட்டிய சுகம்,
கார்கிலில் யுத்தம் அண்டைநாட்டுடன் கதாசிரியனுக்கு
கதைகளம் கிடைத்த களிப்பு,
கூவுகின்ற குயிலின் குரல் குரு தேடும் பாடகனுக்குகுரு கிடைத்த குளிர்ச்சி,
பெட்டையை விரட்டிச் செல்லும் சேவல் சிறுவர்களுக்கு
புதுவிளையாட்டு விளைந்த சுகம்,
கல்லூரியில் கலாட்டாவால் மறியல்- காதலர்களுக்கு
காரணம் கிடைத்த களிப்பு,
மேகம் கறுத்து இடியோடு இருட்டிடவிவசாயிகளுக்கு
மழை காணும் சுகம்,
காற்றில்மணம் பரவிட பூக்கள் மலர்ந்தசுகம் தேனிக்களுக்கு. ஆனால் என்னுள் ஏன் இந்த இன்பம்?ஓ அவளின் கடைக்கண் பார்வை பட்டு சென்றதாலா?விடை தந்து மடிதருவாளா!!! கொடிஇடையாள்!!!!!
விடை தேடி,
காவியன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment