Search This Blog

Thursday, September 07, 2006

காத்திருக்கிறேன்.


வீட்டுவிஷேசத்திற்கு வந்து விஷேசமானவள் நீ,
நீ வீட்டிலமர்ந்துஉணவு அருந்திய இடத்தில் அமர்ந்து காத்திருக்கிறேன்.உணவுக்காக அல்ல,உன் வருகைக்காக.!!
கோயிலில் நீ நின்று கடவுளை வணங்கிய இடத்தில் நின்றுகடவுளை தொழுகிறேன்.கடவுளை கண்டிட அல்ல,உன் வருகைக்காக.!!!
விடியலேகூடாது என்றபடி விழிகள் எரிந்திட,எரித்தபடி உதிக்கும்
ஆதவனை திட்டி தீர்த்திட்ட அந்த இடத்தினில் காத்திருக்கிறேன்.
உதயம் காண அல்ல,உன்னை காண.!!
தண்ணிரற்ற காவிரியில் உன்காலடி பதிந்த சுவட்டில்,என்தடம்
பதித்த இடங்களில் மாடுகள் விரட்டி காத்திருக்கிறேன்.
புற்களுக்காக அல்ல,உன் வருகைக்காக.!!!
பேருந்தில் ஐந்து இருக்கைகள் இருந்தும்,நீஅமராமல் கம்பி பிடித்து
என்னை களித்து நின்ற கம்பியை பிடித்திட அல்ல,
நான் காத்திருப்பது உன் வருகைக்காக.!!!!
நாம் அமர்ந்து கிள்ளி எறிந்த புற்கள் கிள்ளிட நாம்இன்றி
சோர்ந்து தலைகுனிந்திருக்கின்ற இடங்களில்
காத்திருக்கிறேன்.உன் வருகைக்காக.!!
ஒதுங்கிநிற்க கூட முடியாத மரத்தடியில் உட்கார்ந்து அதன் உதிர்இலை
எடுத்து ஜாதகம் கணித்த இடங்களில்காத்திருக்கிறேன். உன்வருகைக்காக!!

கெட்டிமேளம் கொட்டி மூன்றுமுடிச்சு தாங்கிகொண்டதால் தலவாழையில் தடபுடலாய் சாப்பாடு சங்கதி அறியாதவருக்கும்.ஆனால்
எனக்குத் தானே தெரியும்-அது உனக்கு தாலிக்கயிறு அல்ல -
தூக்குகயிறு என்று.அதனால் தான் நாம்(நீ) இதுவரை வராத இந்தசவப்பெட்டியில் காத்திருக்கிறேன்.!!!
உன் வருகைக்காக அல்ல,உன்னை எடுத்து வரும் எமனிடம் என்னுயிரைத் தந்திட.(சவமாய் அல்ல,சாகாமல் ஆம் நீவிதவையாய் சாகவிரும்பாத சத்ரியனாய்.)

அன்புடன் காத்திருக்கும்.
காவியன்.

4 comments:

Anonymous said...

wassup chokks..
mannn u r just AWESOMEEEE DUDE.. i read all of your creations.. was just GREAT... to be very frank i never thought .. u r tht good at it.. i never gotta chance to read so much or ur writing.. tht's really amazing.. I AM REALLY PROUD OF UU chokkitho..keep it up... keep it popping my niggir..will hit u up some other time.. YOU ARE REALLY GREAT!!!!!!!!!!!..JUST KEEP UP WITH YOUR WORK.. !PEACE...

Anonymous said...

hi kaavi.im sorry i cant understand kavidhai so i left it as my mom's bussiness.she explained to me.its very nice.congrats and best wishes.

நாமக்கல் சிபி said...

காவியன்,

அருமையான கவிதை!

கடைசி சில வரிகளில் மனசைக் கலங்கடிச்சிட்டீங்களே!

நாமக்கல் சிபி said...

//அதனால் தான் நாம்(நீ) இதுவரை வராத இந்தசவப்பெட்டியில் காத்திருக்கிறேன்.!!!
//

:(