நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Thursday, September 07, 2006
மின்சார(மக்கள்)தொகை
ஆல்வாஎடிசன் அறிவில் வந்த அதிசயமே!
கருமை போக்கும் கதிரவனின் கருப்புவாரிசே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்றனர் ஆலயத்தினை!
தட்டியதும் திறக்காமலேயே தந்தாயே வெளிச்சத்தினை.
காற்றும்-நீயும் என்ன எதிர்மறை பங்காளிகளோ!!.
காற்றை உணர முடியும் பிடிக்க முடியாது.
உன்னையும் உணர முடியும் பிடிக்க முடியாது பியூஸ்போனாலன்றி.
காற்று எங்களை பிடித்தாலும் உயிர்பிரிவது உறுதிதான் .நீ
எங்களை பிடித்தாலோ உயிர்பிரித்து குடிப்பதோ குருதி தான்.நீரிலும் பாய்கிறாய் நிலத்திலும் பாய்கிறாய் எப்படி இருப்பாய்?
தண்ணீர் மாதிரியா?இல்லை தகரம் மாதிரியா?
உன்னை சேமித்து வைக்க சொல்கின்றனரே!அடுத்த சந்ததிக்காகவா?
ஏன் உங்களுக்கு ஓய்வு இல்லையோ? ஓய்வில் களவும் இல்லையோ!
உங்கள் சந்ததியை வளப்படுத்த.ஆம் எனில் வாங்கிகொள் ஆண்மையைகடனாக இந்திய மக்களிடம் இன்றே.
ஆயிரமாயிரமாய் வளர்த்திடு -ஆல்வாவின் அதிசயத்தை.ஆம்
இதோ இன்று முதல்நிலையை எட்டும்வேகத்தில் இன்னல் நிலையிலும்
நீ பாய்வதை விட வேகமாக.இருவருக்கேன் ஒருவர் என்ற விளம்பரம் வியாதியாய் பரவி விழிக்க சொன்னாலும் விழிக்காமலே
இன்புற்றிருக்கும் இந்தியா.இன்னல் நிலையிலும் மறப்பதில்லை-மறைப்பதுமில்லை இந்திய மக்கள்தொகைப் பெருக்கத்தை.
கலக்கத்தோடு,
காவியன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment