நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Wednesday, September 13, 2006
உன் எண்ணச் சிறகுகள்
களங்கிய குட்டையை ரசிக்க கற்றுத் தந்தவள்-நீ
மெளனமொழி கண்கள் பேசிட கற்றுத் தந்தவள்-நீ
விடியலை வரவேற்றிட கற்றுத் தந்தவள்-நீ
அன்பு எனும் சொல்லின் அடையாளம் காட்டியவள்-நீ
நொடியின் நீளம் கற்றுத் தந்தவள்-நீ
இடியின் இரைச்சலை இசையாக்கி காட்டியவள்-நீ
ஓடி ஒளியும் மின்னலின் இயலாமையை காட்டியவள்-நீ அன்று
அருகில் இருந்ததால் அனைத்தம் இனித்தன.இன்றோ
நீ அருகில் இல்லாததால் தொடர்ந்திடும் அலைகள்,
மலைகளின் குளுமை,வானவில்லின் வண்ணம்,
தென்றலின் தீண்டல் என எதுவுமே என்னைத்
தொடுவதில்லை. உன் எண்ணங்களைத் தவிர.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment