மண் விட்டுப் பிரிந்த மலை- தாய் பிரிந்த சேய்,
நெஞ்சம் விட்ட நினைவு -நெருப்பை விட்ட அனல்,
வானம் விட்ட மேகம்- நட்சத்திரம் இல்லா இரவு,
துடுப்பு இல்ல படகு -பூக்கள் இல்லா செடி,
வாசம் இல்லா மலர்- பாசம் இல்லா பாலகன்,
நீர் இல்லா குளம்- கோயில் இல்லா ஊர்,
உயிர் இல்லா உடல்- புதிர் இல்லா வாழ்வு- என எவ்வளவோ பேசினாய், என்னை பிரிந்திருந்த கணங்களின் தவிப்பை கவிதையாய்!காதலித்த போது. என் நிழல் விழாத பகலும் நித்திரையாய் உணர்ந்தேன் என்றாயே?
மாற்றிக் கொண்டாயோ மணமான பின்னே மனதினை?
மங்களகரமாய் திரிகின்றாயே மலையாய் பேசிய நீ. மாறாக பேசிடாத நான் மட்டும் தாடியோடு. பெண்ணே! நானும்தான் மாறிவிட்டேன் இன்று.
ஆம் நானும் கவிதையாய் பேசுகின்றேன் பெண்ணே நீயும் பெண்ணா?
No comments:
Post a Comment