Search This Blog

Sunday, September 10, 2006

வதந்தியாய் வந்த காதல்


குளித்திட குளக்கரை நோக்கி செல்லையிலே- அவளும் அங்கே
குளித்திட, குளித்தவர்கள் இணைத்து பேசிட,
பேருந்துக்காக காத்திருக்கையிலே- அவளும் ஏறிட
பயணிகளும் இணைத்து பேசிட,
மதிய உணவு மறந்த தினம் மனிதாபிமானமாய் உணவு தந்திட,
உடன் உன்டோர் இணைத்து பேசிட,
மழைக்காக ஒதுங்கி நின்றிருக்கையிலே- குடை பிடித்து
சென்றோரும் இணைத்து பேசிட,
குலதெய்வம் என குடும்பத்தோடு அவள் சென்றிட குலத்தொழிலாய்கொண்டநான் குங்குமம் கொடுத்திட,
கண்ட காற்றும் சற்று இரைந்து வீசியபோது உணர்ந்தோம்
மரங்களும் இணைத்து பேசுவதாய் மனிதர்களோடு. இணைத்து
பேசியதால் இணைந்து போன இதயங்கள் .இணைந்து வாழ
விரும்பிய போது யாருமே வரவில்லை.
வாழ்த்திடவும் வரவேற்றிடவும்.ஆனால் வதந்தி மட்டும்
வந்த வண்ணமாய் மற்ற ஜோடியை சேர்த்து பேசியபடி.ஊர்
வதந்தியால் வந்த காதல் எங்களை ஊமையாய் ஆக்கி போனது.

No comments: