Search This Blog

Thursday, May 17, 2007

என்னருகே நீ இருந்தால்

கோடையில் நீ நடந்திடும் வீதிக்கே
விசிறிகட்டி உன் நிழலுக்கும்
குளுமை தந்திடுவேன்.




மழைகாலத்தில் நீ நடந்திடும் நேரம்
மழைத்துளி மண்விறைந்து உன்மீது
சிதறுண்டால் விண்ணையே
சிறைவைப்பேன் உன் கூந்தலில்.





குளிரில் நீ நடுங்கிட நேர்ந்தால் அந்த
சூரியனையே இரவிலும் விழித்திருக்க
வைத்து சூரியனுக்கே தண்டனை
அளிப்பேன்உன் வேல்விழி வாங்கி .




இவை அனைத்தும் சாத்யமா! சாமன்யனே?
என கேட்காதே. என்னருகில் நீ இருந்தால்,
அரபிக் கடலும் கூட ஆறு அடி ஆழம்தான் எனக்கு.



Tuesday, May 15, 2007

உனக்கே உனக்காய்
















NET-இல் வந்த உன்னை நேரில் அழைத்தேன்.
நேரில் வர வெட்கப்பட்ட நீயோ!
வெண்ணிலவாய் எட்டா உயரத்தில் தோன்றினாய்.





எட்டவில்லை உன்னை தொட என்றேன்.
வானம் தொட்டு விடும் தூரம் தான் என்றாய்.



மூச்சு முட்ட பொய் சொன்னேன்.
வான் இறங்கி நிழலாய் வந்தாய்.





அய்யோ! நிழல் மிதி படுகிறதே என்று,
உன் நிழல் என்மேல மட்டுமே விழுந்திட,
நிழலுக்கு குடை பிடித்து நடந்து வந்தேன்.





இப்படி உன் நிழலுக்கே குடை பிடித்தவன்
இன்று இடி இல்லை,மின்னல் இல்லை
இருந்தாலும் நனைகின்றேன் உன் நினைவுகளால்.











வெண்ணிலா! நீ என்றேன்.
முடிந்தால் தொட்டுக்கொள்
என்றாய்.




இந்த ஏழைக்கு ஏணி கிடையாதா
என்றேன்.

நீயோ இறங்கி வந்தாய்.





இறங்கி வந்த உன்னால் நான்
உயரத்தில் நின்றேன் உன் மனதில்.




என்னை ஏற்றி வைத்த உனக்கு
நெற்றிப்பொட்டிட

பொட்டாக நட்சத்திரத்தை திருடித்
தந்தேன்.




என்னைத் திருடிய திருடி-
உனக்காக‌,

நானும்
திருட‌னானேன்.




இதோ இன்ன‌மும் திருடிக்
கொண்டிருக்கிறேன்

உன‌க்காக‌
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை.




ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளும்
குறைய‌வில்லை.

உன்மேல் கொண்ட‌ காத‌லும்
குறைய‌வில்லை.

Saturday, May 05, 2007

என் ஜன்னல் வழி பார்வை.





























வேலையற்ற ஒரு வெள்ளிக்கிழமை-ஜன்னல்
வழி



வெறித்து
வேடிக்கை பார்த்தேன்
வெளியுலகை.



வெள்ளை சுடிதாரில் தேவதையாய் உன்னைக்
கண்டேன்.



வேகமாய் வெளியேறி தேரடி வீதி எங்கும்


தேடினேன் விழிகொண்டு.





பள்ளிக்கு பேருந்தில் பயணித்த போது ஒவ்வொரு
நாளும்



ஜன்னலோர இருக்கையையே நாடியது


உன்னை கண்டபின்னே-


‍எனது நண்பர்கள் மனம் போலவே.


ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காய்


உள்ளிருக்கும் அழகிகளுடன் தோற்று


ஓடிச் செல்லும் சாலையோர அழகிகள்.



கல்லூரிக்கு புகைவண்டியில் பயணித்தபோது


படித்த மெட்டுக்கள்-
கேட்டு, மலர்ந்த
மொட்டாய்,



மலர்ந்து இறங்கி மறைந்திடும் மங்கையர்
கூட்டம்



கண்டிடவே தினம் தேடியது ஜன்னலோர
இருக்கையை.





ஆனால்!
பெண்ணே உனக்கும் ஏனோ ஜன்னல் மீது
மோகம்.



ஆம் உன் மேலாடையிலும் ஜன்னல்கள்,


ஜடையோடு போட்டி போட்ட படி-


எனக்கு ஜாடை சொல்லிய படி .



ஆண் நான் ஜன்னலில் மோகம் கொண்டதால்,


உன்னுள் மோகம் நான் கொள்ள
கொண்டாயோ?!



ஜன்னலை உன்
ஜாக்கெட்டினிலும்.






எத்தனையோ எதிர் கொண்டேன் என்
ஜன்னல் வழி



பார்வையில்.ஆனால் பட்டபகலில்
ஒரு மின்னலாய்



உன் தேகம் சிதைத்தது போல
சிதைத்ததில்லை,



என்னை வேறொன்றும்.





வின்னில்
வீசிடும் மின்னல் கீற்று, நொடியில்



மறைந்திடும் கருமேகத்தினூடே.ஆனால்


உன் தேக மின்னல் மட்டும் மறைவதே இல்லை


உன் கருங்கூந்தல் மறைத்தும் கூட.

Thursday, May 03, 2007

நினைவுகள்






சின்ன வயசுல சைக்கிள்
கேட்டேன் -கிடைச்சது,

பைக் கேட்டேன்- கிடைச்சது,
கார் கேட்டேன் -காரும்
கிடைச்சது,

பதவி கேட்டேன்- பதவியும்
கிடைச்சது.

காதல் கேட்டென் காதலும்
கிடைச்சது.

அதுக்கு மேல
கல்யானம்கேட்டேன்.

எனக்கு கிடைக்கலை-உனக்கு
கிடைச்சிறுச்சி.

இப்படி எது கிடைச்சாலும் அதுக்கு மேல
தேடுற

மனசு உன் ஒருத்தி விசயத்துல
மட்டும்,

நீ மத்தவன் மனைவி ஆன
பின்னும்,

மன்மதன் மயங்கும் மங்கையரும் களிமண்
பொம்மைகளானது ஏனடி?


எழுதுகோலுடன் எழுதுதாள்,

காதலனுடன் காதலி,

பூக்களுடன் தேனீக்கள்,

வசந்தத்துடன் வாடைகாற்று,

வானத்துடன் வானவில்,

உடல்கள் கொள்ளும் உறவு,

உதிர்ந்தோடும் காலங்கள் என

எல்லாமே நினைவுகள் என்னும்

விதைகளை மட்டும் விட்டுச் செல்கின்றன,

விதைகள் மட்டும் விழுந்த வண்ணமாய்.

Wednesday, March 28, 2007

உன் நினைவென்னும் சிலுவை






உண்மைக்கு உதாரணமாய்
அரிச்சந்திரனை

சொல்லிடும் இந்த உலகிலே , அந்த
அரிச்சந்திரனுக்கே

உதாரணமாய் என்னைத் தானடி
எடுத்துக் காட்டினர் எனது
ஊரினர்.





என்று உன்னைக் கண்டு "நீ தான்
எனது தேவதை" என்று

சொன்னேனோ அன்று முதலே எனது
நாவினிலே

நவரசமாய் பொய்கள் உன்னை
சேர்ந்திட,




உழைப்பே உயர்வு தரும் என்பதே
வேதமாய்

கொன்டு எறும்பு போல
இருந்தேனடி, என்று உன் பிரிவை

இரவில் உணர ஆரம்பித்தேனோ அன்று
முதலே

சூரியன் மறைந்ததுமே
மறுநாள் விரைவில் விடிந்திட

வீம்பாய் கண்களை இறுக்கி மூடிக்
கிடந்த முட்டாளடி நான்.




திருடனை கண்டால் காறி
உமிழ்ந்து சென்றவனடி

என்று என்னை திருடா என
அழைத்தாயோ

அன்று முதல் எனக்கு திருடன்
என்கிற

வார்த்தையே
அழகானதடி.



என் அண்ணன் என்னைபொறுக்கி போல
சுற்றித்

திறிகின்றேன் என்றதுக்கே பொசுக்கி எறிந்திட

துணிந்தவனடி நான்,ஆனால் நீஎன்னை
பொறுக்கி

என்ற போது மட்டும்
ஆயிரம் கோடி பேரில்

உன்னைபொறுக்கி எடுத்த
பாக்கியவான் என்றிருந்தேன்.






நீதிக்குப் பெயர் பெற்ற
மனுநீதிசோழனுக்கே

மாஜி மந்திரியடி நான்.ஆனால்
இப்போதெல்லாம் உனக்கு

மட்டுமே சாதகமாய்
சாட்சி சொல்கிறேனடி.





நல்லவனாய் தானிருந்தேன் உன்னை
கண்டிடும்முன்னே

திருட‌னாக்கினாய்‍-திமிரு
கொண்டேன்.

பொய்ய‌னாக்கினாய் - பொறுமை கொண்டேன்

பொறுக்கியாக்கினாய்- பொறாமை
கொண்டேன்

சோம்பேறியாக்கினாய் -க‌ன‌வினில்
மித‌ந்தேன்

வ‌ஞ்ச‌க‌னுமாக்கினாய் -வாழ்வை
உண‌ர்ந்த்தேன்

மற்றவனோடு மணம் கொண்டு,

என்னை மரணத்தில் அலைய
விட்டாயடிஉன் நினைவென்னும் சிலுவை சுமந்து.