நீ நடந்திட, பாதைக்கு மலர்களைவிரித்திட எண்ணினேன்.ஆயிரம் அழகிகள் என்னிடம்வாளேந்தி போருக்கு அழைத்தபடி.ஆம்! நீ நடந்திடும் பாதையில்பாயாய் விரிந்திட,தாங்கள் மலர்களை விடஎவ்விதத்தில் குறைகொண்டோர்என குமுறலோடு.மலருக்கும்-மங்கையருக்கும்நம்மால் வேண்டாம் இனபாகுபாடுஎன்றெண்னி என் கையேந்திஎடுத்துச் சென்றேன் பஞ்சுமெத்தைக்கு.
அங்கே பருத்திக்கும்-
பட்டுப்பூச்சிக்கும்இடையே பயங்கர கலவரம்.உலகிற்கு இன்னும்
பல்லாயிரம்பஞ்சுமெத்தைகள்
தேவைபடும்,அதனால் நம்மால் பிரிவினைவேண்டமென்று உன்னைஎன் மார்பில் தாங்கினேன்.
நீ நீராடிட காவேரி கூட்டிச்
சென்றேன்.மழையோ கோபத்துடன் தரை
இறங்கியது,வெண்மேகத்தின் வேலியினைத்
தாண்டி.நம்மால் மழைக்கும்-மேகத்துக்கும்கூடாது உட்பூசல் என எண்ணி,சமாதான கொடி காட்டினேன்என் வெண்ணிற வேட்டி கழட்டி.
உன் கூந்தல் ஈரம் போக்கிடமுடி அவிழ்த்ததில், நெகிழ்ந்துபோனபூங்காற்று, முடி
உலர்த்திடஊர்ந்து வந்திட, சூரியன்
கோபமாகிகாற்றோடு கை கலக்கப்
பார்த்திட,வேண்டாம் நம்மால்
நாட்டினருக்கு"பகலும் ஒரு இரவாய்" என்றெண்ணிஎன்
மூச்சுக்காற்றினிலேயேஉன் கூந்தல் ஈரம்
உலர்த்தினேன்.
உடை உடுத்தி
பொருட்காட்சிகூட்டிச்
சென்றேன்.அழகுக்கு வைத்திருந்த
பொம்மைகள்உயிர்கொண்டு அதன்
ஆடைகள்கழட்டி உனக்கு தந்திட துணியவேவேண்டாம்
பொம்மைக்கும்-பொதுமக்களுக்கும்,பொதுக்காட்சியாய் என எண்ணி
வெளிவந்தோம்.
மகராணி உனக்காய் மதிய
உணவுக்காகஉய்ர்தர உணவு விடுதி
நுழைந்திட,உன் செவ்விதழ் உரசி
உட்ச்சென்ற,உணவு உற்சாகம்
கொண்டிட,உதடு உரசாமல் உள்சென்ற குடிநீர்
குமுறிட,வேண்டாமே
உணவுக்கும்-குடிநீருக்கும்உறவுமுறிவு என எண்ணிநானே உணவு
ஊட்டினேன்.
கடற்சுவாசம் வாங்க கடற்கரை
சென்றிட,உன்னை கண்டதால் உவப்பு
மிகுதியில்வெண்ணுரையோடு நுரம்பி
நெருங்கிட,உன்னை கொண்டதால் கடற்கரையோ
மின்னிட,கடற்கரைக்கும்-நுரையலைக்கும்வேன்டாமே மல்யுத்தம் என
எண்ணிஎழுந்து நடந்தோம் எல்லை
நோக்கி.
உணவு முடித்து, தரை இறங்கிய,



