Search This Blog

Tuesday, August 07, 2007

காத‌ல்.விஞ்ஞான‌ம் அறியாத‌ வியாதி






ஆஹா! என்ன அழகான காது,
இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்
என பலமுறை நன்றி சொல்லி
இருக்கிறேன்
இறைவனுக்கு.ஆம்

ஆயிரம் இரைச்சலிலும் பெண்களின்
குரல் மட்டும் கவர்ந்து,அந்த
குரலினை ரசிக்க வைத்ததால்.


ஆஹா! என்ன அழகான்
கண்கள்,

இறைவன் எனக்கு இட்டிருக்கிறான்
என எவ்வளவோ முறை நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்

ஆயிரம் பெண்களில் அழகான்
பெண்களை மட்டும் கண்டறிந்து
களிப்படைய செய்த்தால்.


ஆஹா! என்ன உயர்வான நாசி,
இறைவன் எனக்கு நட்டிருக்கிறான்
என

நாட்கணக்கில் நன்றி சொல்லி
இருக்கிறேன் இறைவனுக்கு.ஆம்
என்னைச் சுற்றி என்னென்னவோ நடந்து
வந்தாலும் பெண்ணின் வரவு
மட்டும்

முகர்ந்து-முகம் கண்டு, மலரச்
செய்வதால்.



ஆஹா! என்ன இதமான நாவினை
தந்திருக்கிறான், என தவம் கிடந்து
நன்றி சொல்லி இருக்கிறேன்,
இறைவனுக்கு. ஆம் சுவைக்காமலையே
பெண்னை சுவையானவள் என,
சொல்லிடச் செய்ததால்.


ஆஹா! என்ன வலிமையான வாய்,
இறைவன் அளித்திருக்கிறான்
என

அயராது அல்லும் பகலும் நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்

நான் பேசிட ஆயிரம் விசயங்கள்
இருந்தாலும் பெண்களிடம்
மட்டுமே

பேசி
சிரித்திருந்ததால்.


ஜம்புலனும் அடக்கி பெண்களை மட்டுமே
பார்த்து,பேசி,கேட்டு,சுவைத்து,உணர்ந்து வந்த

நான் அடங்கிப் போனேன்.பெரியோரின்
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற விளம்பரம்
கண்டு.


ஆயிரம் பெண்களில் ஒருத்தியைத்
தேடினேன்.

ஆயிரத்தில் ஒருத்தியாய் அவள் வந்தாள்.
ஜம்புல‌னையும் அட‌க்கி அதிச‌யித்து
ந‌ன்றி சொன்ன‌ என்னையும் அட‌க்கி
விட்டாள்,

என் புல‌ன்க‌ளையும் அட‌க்கி
விட்டாள்.



ஆம் என் காதுக‌ளை
செவிடாக்கினாள்,

ஆம் அவ‌ளின் குர‌லை ம‌ட்டுமே ஏற்றுக்
கொண்டு.


என் க‌ண்க‌ள் பார்வை இழ‌ந்தன‌,ஆம்
அவ‌ளின் உருவ‌ம் ம‌ட்டும் ஏற்றுக்கொண்டு.
ம‌ற்ற‌ன‌ யாவும் காணாம‌ல்.


என் நாசிக‌ளும் உண‌ர்விழ‌ந்த‌ன‌. ஆம்
அவ‌ளின் வ‌ர‌வு ம‌ட்டும் உண‌ர்ந்து
கொண்டு

ம‌ற்ற‌ன‌ யாவும் ம‌ற‌ந்து.
.


என் நாவும் ருசியிழ‌ந்த‌ன‌.ஆம் ம‌ற்ற‌வ‌ர்
யாரையும் சுவைத்திடாம‌ல்
போன‌தால்



என் வாயும் பேச்சிழ‌ந்த‌ன‌.ஆம்
அவ‌ளை

ம‌ட்டுமே பேச‌ச்
சொல்லி,

பேச்சினை கேட்டிருந்ததால்.



ஆஹா எப்ப‌டி இருந்த‌ நான் இப்ப‌டி
ஆயிட்டேனேஎன‌ என்னைப் ப‌ற்றிய‌
ஏச்சுக்க‌ள் கூட‌ அறியாத‌வ‌னா
இருந்தேன்.



இப்ப‌டி உன் ஒருத்தியால் ஊரில்
உள்ள‌

அனைவ‌ருக்கும்
குருட‌னானேன்,
செவிட‌னானேன்
ஊமையானேன்,
உண‌ர்ச்சியும் இழ‌ந்து ந‌டைபிண‌மானேன்.
ஜ‌ம்புல‌னும் அட‌க்கி
ஆண்ட‌வ‌னுக்கு,

ஜ‌ம்புல‌னும் அட‌ங்கிப் போயின‌-
அவ‌ளின் வ‌ருகையால்.


வேண்டாம் இப்ப‌டி ஒரு காதல்
என‌,

ஒருநாள் ஒதுக்கிட‌
நினைத்து

ஒதுங்கி இருந்தேன்.அந்த‌ ஒரு நாளில்
நான் ஒழிந்தே
போனேன்.



No comments: