Search This Blog

Tuesday, January 16, 2007

நீ ஏசும் போது நானும் ஏசுவே!




எருமை மாடே!இதுதான் நீ
திட்டிய,பேசிய முதல் வார்த்தை.
நீ திட்டியதால் அனைவரும் சிரித்தனர். மறுநாள்- நீ
திட்டியபின்னே என்வீட்டு எருமைமாடும்-எமதர்மனும்
கூடஅழகாய் தெரிகிறது என்றதும், நீயே! சிரித்தாய்.





சிரிப்புடனே ஓசையின்றி வரும் தென்றலாய்
உன் நிழலோடு வடம் பிடித்து வந்தேன்.
செருப்பு பிஞ்சிடும் நாயே!
என்றாய். நீ சொல்லிய
மறுகணமே என்காலில் இருந்த செருப்பை பிய்த்து
கையில் தொங்கவிட்டபடி தொடர்ந்தேன். நீ என்னை
திரும்பி பார்த்த மறுகணமே மந்திரம் போல
வார்த்தையை உதிர்த்தேன்.
செருப்பு
பிஞ்சிடும்
என்றாய்,
இதோ! மறுகணமே பிய்ந்துவிட்டது.போதும்,
மேற்கொண்டு எதும் சாபம் விட்டுவிடாதே
என்றதும் சாந்தமாய் சிரித்துநடந்தாய்.




வரும் வழியெல்லாம் நாய் கண்டால் கல் எடுப்போர்
மத்தியிலே நானும்-நீயும் மட்டும் புண்ணகை பூண்டோம்.



மறுநாள் குளிக்காமலேயே உன்னைத் தொடர்ந்திட,
யாருமற்ற ஒரு இடத்தில்
குளிக்கலையா
அழுக்குப்பையா?
என்றாய்.இல்லை ,என்றதும் எட்டி நடந்தாய்
நக்கலோடு.
உன்நிழல் நேற்று என் உடலில் படர்ந்ததால் என்று
சற்று சத்தமாய் சொல்லிடஓடி வந்து வாயைப் பொத்தினாய்.



சந்தோசத்தில் எகிறி குதித்திட எகத்தாளத்தோடு சொல்லிப் போனாய்.நாளைக்குப்
பல்லும் தேய்க்காமல் வந்திடாதே
வாத்துமடையா!! என்று.



இந்த
வார்த்தை உன்னுள் என்னை
உறுதிப்படுத்திட உதயவனுக்குமுன்னே உதித்து விடச்செய்தது
எனது விழிகளை.விழிகளின் எரிச்சலையும் பொருட்டின்றி
உன்கூர் விழிகள் நோக்கி அம்பாய் என் அன்பினை எய்தினேன்.




கொஞ்சம் கோபம்-கொஞ்சம் நாணம் இரண்டும் சேர்ந்து
சிவந்தமுகத்தோடு சொன்னாய்.
'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்னக்
குரங்காட்டம்',



இது என்ன பதிலா? இல்லை, இதில் பதில் உள்ளதா,
என புரியாமல் அந்த நாள் முழுதும்,அழகி நீ இருக்கும்
இடம் விட்டு குரங்குகள் நிறைந்த பூங்காவில்
வாழைப்பழத்தோடும்-இஞ்சியோடும் இருந்திருந்தேன்.




அந்திவந்தும், மந்தி பல வந்தும் பதில் இன்றி பரிதாபமாய்
வீடு வந்தேன். பதிலுக்காக,பார்வையாலேயே கேட்டேன்
பரிதாபமாய் மறுநாள்.



நான், நாள் முழுதும் தேடியும் இஞ்சி தின்ன குரங்கை
பார்க்கவில்லையே நீ எங்கே கண்டாய்? என்றதும்,



பதில் இன்றி பலமாய் சிரித்தாய். இதற்கு ஏன் நாள்
முழுதும் பூங்காவில் காத்துக் கிடந்தாய்.



நாழிகை நொடிபோதுமே! நீ கண்ணாடி முன்னே
நின்றிருந்தால் என்றாய். கோபம் பொங்கிட நான்
பார்க்க-பயத்தில் மிரண்டு எட்டி நடை வைத்தாய்,
எட்டிச் சென்ற உன்னை எட்டிக் கைப்பிடித்திட,
கை உதறி போடா பொறுக்கி!
என்றாய்.



இந்த வார்த்தையை நீ சொல்லி புன்முறுவிட- புரியாமல்
தவித்த நான் வீடு வந்துதான் உணர்ந்தேன்.நீ
உதிர்த்த புன்னகையை பொறுக்கி வரவில்லை என்பதை.



எத்தனை முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன் நீ
உதிர்த்த அந்த புன்னகையை என்னுடைய
படுக்கையறையில்.



வாய் வார்த்தையாய் திட்டு வாங்கிய நான் உன்னிடம்
செல்லமாய்அடிவாங்கிடத் தொடங்கினேன்.




நீ திட்டுவதற்காக ஏங்கி இருந்த கணங்கள் போல
காத்திருந்தேன், நீ செல்லமாக மார்பில் குத்தி
தலைசாய்ந்திடும் சந்தர்ப்பங்களுக்காக.




'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள், நமக்குத்தானே
தெரியும், நாற்புறமும் படபடக்க உருண்டு சுழன்ற
நம் விழிகளின் வேகம் ஒலியின் வேகத்தை விட
பன்மடங்கு அதிகம் என்பது.



எத்தனையோ இரவு நிம்மதியோடு உறங்கியிருக்கிறோம்,
யார் கண்ணிலும் சிக்கவில்லை என நினைத்து.

நீ திட்டியதாலே எருமைமாடும்-எமனும் கூட பிடித்துப்
போய்விட்டதால் ஆசிர்வாதம் கேட்டு மண்டியிட்டதுமே
உன்மாமனாருக்கும் பிடித்துவிடும் என நினைத்து
என் அப்பாவிடம் அழைத்துவந்தேன்.



பிடித்துதான் போனது என் அப்பாவுக்கும்.அதனால்
மறுமாதமே கெட்டிமேளம்.உன்னோடு அல்ல,


ஆமாம். அப்பாவுக்கு பிடித்தது உன்னை அல்ல-
அவருக்கு பிடித்தது பைத்தியம்.



உன்னை பிடிக்காத அப்பாவால், எனக்குப்
பிடிக்காதவளோடு பிடிவாதத்திருமனம்.

திட்டு வாங்குவதற்கே திவிட்டாத இன்பமாய்
காத்திருந்து திட்டும்-அடியும் வாங்கிய, நான் அன்று
ஏசுவாய் இருந்தேன் நீ ஏசிய பொழுதிலெல்லாம்.



இதோ இன்றுநீ வாழ்த்திய வாக்கியத்தில்
வாழாவெட்டியாய் வாழ்கிறேனடி.

Sunday, January 07, 2007

உனக்காக ஒரு வரம்



அகத்தியன் இருந்திருந்தால் அவனிடம் ஒரு சொல்
கேட்டு இருப்பேன் தமிழில்.
எனது அன்பை நீ உணர்ந்திட .

சாணக்யன் இருந்திருந்தால் அவனிடம் ஒரு தந்திரம்
கேட்டு இருப்பேன். எனது அன்பை நீ உணர்ந்திட.

சத்ரியன் இருந்திருந்தால் அவனின் உயிரினை
கேட்டு இருப்பேன்.உனக்காக இறக்காமல்
என் அன்பை நீ உணர்ந்திட .

கொலம்பஸ் இருந்திருந்தால் அவனிடம்
ஒரு அழகிய தீவுகேட்டு இருந்திருப்பேன்.
எனது அன்பை நீ உணர்ந்திட .

மனுநீதி சோழன் இருந்திருந்தால் அவனிடம் நீதி
கேட்டு இருந்திருப்பேன். நீ நிம்மதியாயில்லை என
என்ன செய்ய ! உன் அம்மா தான் இருக்கிறாள்.
அவளிடம்என்ன கேட்க? ஒன்னே ஒன்னுதான்
கேட்டேன் அதுவும் உன்னையே தான் கேட்டேன்.

நீ என் அன்பை உணர்ந்து கொள்ள அல்லடி.
உன்னை நீ உணர்ந்து கொள்ளத் தானடி.

Saturday, January 06, 2007



உள்ளத்தின்அலைகளாக எண்ணங்களை ஏற்படுத்துகிறாயே
இடைவிடாது நீ! என்ன கண்ணில் காணமுடியாத கடலா?
இல்லை என்னுள் இறக்கைகொண்ட இன்னொருவனா?

கூடாது!! என கூறியதை சிந்திக்காமல் செய்யதூண்டுகிறாயே!
நீஎன்ன மேதையா? இல்லை மேதாவியா?
உண்மையில் உன் உருவம் தான் என்னவோ?

உன்னை அடக்கி வைக்க எண்ணிய என்னI
அறுபதுநொடிகள் அலைகழித்து‍‍‍‍ அடங்கி
அமைதியாகி ஏங்கவைக்கிறாயே என்னை!
உன் எண்ணஅலைகளுக்காக‌!!

நீ என்ன பாசமலரா? இல்லை!
பாசங்கு செய்யும் பகலவனா?
உனக்கு இல்லையோ? உலகின் மீது வெறுப்பு!!
அனைத்தையும் அடைய ஆசை கொள்கிறாயே.
முடியாது போனால்அழசெய்கிறாயே என்னை.

நீ என்ன என்னுள் உண்டாகிய‌ உள்ள ஊற்றா?
,உசுப்பேற்றிடிடும்உறவா? இல்லை உளவாளியா?
மலைதாண்டிபறக்க செய்கிறாய்.
பாலையிலும் பானகம் தருகிறாய்.

பதில் கேட்டால் மட்டும் மனமே !!
மெளனம் கொள்கிறாயே!! ஏன்?
உன்னை குரங்கு எனச்சொல்லி குரங்காட்டியாய்
இருக்கச் சொன்னோர் ஏராளம். ஆனால்
நீ தானே ஏவுகிறாய் எல்லோரையும்
எல்லா செயலுக்கும்.

நீ என்ன மனிதனை மறைந்திருந்து
வேலை வாங்கும் முதலாளியா? இல்லை
முந்திச்செல்லும்முதல்வனா?

மனமே மெளனம் இன்றி என் இறைச்சல் அடக்கிடு.

Friday, January 05, 2007

நானும் I.A.S.




உன் நினைவுகள்- அது என்றைக்குமே எனக்கு ரணங்கள்தானடி
உனக்கு அந்த கணங்கள்
நினைவிருக்குமோ?அல்லது நீ
நினைத்துப் பார்த்திட நேரம் இருக்குமோ?
எனக்குத்
தெரியாது.ஆனால்- அந்த நினைவின்
ரணங்கள்-கணங்களின் வலி தெரியுமடி எனக்கு.



"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்" என்ற
வரியினை தந்தவர் யாரென்றே
அறிய இயலாத
வயதிலே முதன் முதலில்,உன்னை கண்ட கணங்கள்
கண் எதிரே கனவாய்
காட்சி தருகுதடி.


அழகு என்ற சொல்லின் விளக்கம் விளங்காத வயதிலேயே
நீஎன்னுள் விதைத்துவிட்டாய்.நீ தான் அழகின்உருவம்
என்றகிற விதையை.இதோ அந்த
விதை இன்று
என்னுள் நினைவு என்னும் இலைகளை
உதிர்த்த இலையிதிர்கால மரமாய்.



ஓரளவு என்னை அறிந்த வயதில் நீயோ
என்னைவிட்டு
தொலைவில். அந்த வயதில் அழகு என்பதை ஆராய்ந்ததில்
உன்னுருவம்
ஓடிவந்து ஒளிர்ந்திட ,உன்னைத் தேடுவதே
இமைகளின் பணியானது.இமைகள் இரண்டும்
இணையவில்லை உறக்கத்திலும்.ஆம் கனவில்
உன் உருவம் வரும்என்பதால்.

அன்று முதல் தேட ஆரம்பித்தேன்
உன்னை.அன்று
தெரியவில்லை நான் தேடியது உன்னை அல்ல
துன்பத்தை என!


கல்வி கற்றிடும் பருவத்தில் உன் காலடித் தேடி
காம்பெளண்ட் கம்பிகளுக்கு
கம்பெனி கொடுத்து
கல்வியின் தரத்தினை இழந்த்தை தந்தை
சுட்டிக்காட்டிய
போதும் உணரவில்லை.


அப்பாவின் ஆசை கனவு நான் I.A.S ஆவது.அவரின்
ஆசை
கனவுஉடைந்து போனது நான்+2 வில் தோற்றபோது.
+2 வில் தோற்ற நான் காதலில்
ஜெயித்து, உன்னுடன்
+2 ஆனதால், ஆனந்தத்தில் I.A.S போல
அதிகாரம் பன்னினேன்
உன்னிடத்தில்.


அப்பா கண்டிப்பதை விட்டுவிட்டார்.நீயோ கண்டுகொள்ள
ஆரம்பித்தாய்.அப்பாவின்
கண்டிப்பு இழந்ததற்கே
உன் கண் அசைவு கிட்டியதால்
எதையும்
இழந்திட துணிந்தேன்.

"ஒன்றைஇழந்தால்தான் ஒன்றை பெறமுடியும்" என்ற
மொழிமட்டுமே பொன்மொழியானது.ஆனால், உன்
ஒருத்தியை பெற நான் இழந்தது
ஓராயிரத்துக்கும் மேல் என்று உன்னையும்,
இழந்தபின்பு தான் தெரிந்தது.


படியினில் பந்தாவாக தொங்கி பயணஞ்செய்த
நாட்களில் பார்த்து ரசித்த
நீ-படியில் நிற்காதே எனச்
சொல்லியதால் சட்டை கசங்கியபடிஎத்தனையோ முறை
நெருக்கடியில் நெருங்கி நின்றிருக்கிறேன்.


ஸ்டைல் என்ற பெயரில்
உன்கவனம் கவர எத்தனையோ
முறைசிகரெட்டை வைத்து சாகசம் செய்த வேளைகளில்
கீழே
விழுந்தசிகரெட் எடுத்து மறுபடி வாயில் வைக்க சிரித்தாய்.
பின்நாட்களில்சிகரெட்
பற்றி பேசினாலே பார்வையாலே எரித்தாய்.


பொங்கல் பண்டிகையின் போது அனிதாவின்
வீட்டிற்கு
விருந்தாளியாய் வந்த நீ நிதானம் இன்றி போதையில்
நடந்து வந்தவர்
செய்த கோமாளித்தனத்தை நீ ரசித்திட-
பயத்துடன் பாதி குடித்து வந்த எனக்கு
மற்றுமொரு
கும்மாங்குத்து இனிமேல் குடிக்கக் கூடாது என!!


இப்படி நீ
சொன்னதெல்லாம் யோசிக்காமல் நிறைவேற்றிய
நான் உன்னை மணந்திடும் வரம் கேட்க- நீயோ
உன்னை மறந்திடும் வரம்கேட்டாய்!!!


உனக்காக இழப்பதையே பலனாய் கொண்ட நான்
முதன்முதலாய் காரணம் கேட்டேன்.அழகாக சொல்லி
அழச் செய்தாய் என் மனதினை.


நீ ஒரு I.A.S மாப்பிள்ளையை மணந்திட உன் அப்பா
ஆசைபடுவதாய்.
இன்றும்
நினைக்கிறேன்

ஒருவேளை
நானும் பேருந்தில் தொங்காமல்,கீழே விழுந்த
சிகரெட்
குடிக்காமல்,மது பழகாமல்,
அப்பாவின் ஆசைப்படி அறிவாய் படித்திருந்தால்


உன்னோடு சேர்த்து உன் அப்பாவும் என்மேல்
ஆசைப்பட்டு மாப்பிள்ளை ஆக்கி
இருப்பாரோ!!!
என இப்போதும் நினைக்கிறேனடி.


ஊருக்கும் உலகுக்கும்
வேண்டுமானால் நான் I.A.S இல்லாமல்இருக்கலாம்.உன்

Iதயத்தை
Aட்சி Sசய்தவன்
ஆதலால் நானும் I.A.S தானடி.

இதனால் உன் நினைவுகள்
என்றும் ரணங்கள் தானடி
எனக்கு .


Tuesday, December 05, 2006

அறியாத அறிவாளிகள்








நினைத்தாலே கண்கள் மட்டுமல்ல என்
பேனாவும்
கண்ணீர் சிந்தும் நிகழ்ச்சி அது. நீ வீடு காலி செய்து
பக்கத்து
டவுனுக்கு பயணப்பட்ட நேரம், பள்ளிவிடுமுறை
நாளான போதும்கூட நண்பர்கள் உடன்
அரட்டை அடிக்க
ஆற்றங்கறை சென்றிடாமல், அத்தனை தட்டுமுட்டுச்
சாமான்களுடன்,
நீயும் ஏறும்வரை கண்கள் கலங்கிட
காத்திருந்தேன். உன் அப்பா கொடுத்த ஜ்ம்பது
ரூபாயை


வாங்க மறுத்த என் கைகள், நீ
கொடுத்த ஜந்துரூபாயை


அழுதகண்ணோடு வாங்கி
கொன்டேன.இன்னமும் உன்


கைரேகை அழியாமல் உறையிட்டு
பத்திரப்படுத்தி வருகிறேன்.




நீ பெரியவளாகிவிட்டாய் என்று விசேஷ
அழைப்பு


வீட்டுக்கு வர, அம்மாவிடம்
ஆயிரம்முறை


விசாரித்திருக்கிறேன்
உன்னைப்பற்றி.


எத்தனையோ தடைகளுக்குப் பிறகு உன்னை,


உன்வீட்டில் சந்தித்திட உன்
அண்ணனின்


திருமனநிச்சயம் வழிசெய்தது.வீட்டில்


அத்தனையும் புதியமுகங்களாயின
உன்னைத்தவிர.


யாரிடமும் விசாரிக்க மணம்இன்றி
உன்னைத்தேடி


அலைந்த விழிகள் இதயத்தை
இரும்பாக்கியது.




நான் உன்னைத்தேடி வருவேன் என


அறிந்தவள் போலே-கரைஒதுங்கிய
வெண்சங்காய்,


மாமரத்தின் கீழே கிடந்த இலைகளை
கிள்ளி


எறிந்தவாறே தலைகுனிந்தபடி இமைகள்
விரித்தாய்.




விண்மீன்களை எண்ணி சொல்லச்சொல்லி
இருந்தால்


கணநொடியில் எண்ணி சொல்லி
இருப்பேன்.ஆனால்


நான் பேச வந்த வார்த்தைகள்,அதை
எவ்வளவு என


எழுதினால் யுகங்கள் பல
வேண்டும்.எழுதிட, கடல்நீரே!


"மை" ஆனாலும் கூட போதுமா என்பது
சந்தேகமே!.


ஆனால் அத்தனை வார்த்தையும்
இரண்டு


நிமிட மெளனத்தில்
இடம்மாறின.




எப்படியோ!! உன்னைப்பற்றி வருகின்ற
செய்திகளை


மட்டுமே என்காதுகள் கேட்பது போல,
மற்றன எதையுமே


கேளாமல்-நீ படித்திடும் பள்ளியில்
சேர ஆசைப்பட்டேன்.


என்ன செய்ய நான் "ஆடவன்" ஆனதால்
உன்னுடன்


சேர்ந்து படிக்க இயலாது உன்னை
மட்டுமே


படித்தேன் பள்ளிவாசல்களில்
காத்திருந்து.




உன் அண்ணன் அயல்நாடு சென்றிட,
உன்னையும்


அயல்நாட்டிற்கு அழைத்திட, அவன்
நண்பனை உன்னை-


கேட்காமலையே உறுதி செய்யத்
தொடங்கினார்கள்.


இந்த விசயம் அறிந்த நீயோ படிப்பினை
தவிர்த்தாய்.


நானோ விசயம் அறிந்து
துடித்தேன்.


நீயோ விஷத்தை
கையிலெடுத்தாய்.


என் உயிர் கெட்டியோ என்னவோ


உனக்கு ஒன்றும் ஆகிடவில்லை அன்று.




என் அம்மா-அப்பா எவ்வளவோ
சொல்லியும்


கேட்காமல் உன்னைத்தேடி உன்
இல்லம் வந்த


நான் அசிங்கப்படுத்தப்பட்டேன்
உன்பெற்றோர்களால்.


நீ மண்டியிட்டு கேட்டும்
மசியாத உன்பெற்றோர்கள்,


கையில் அட்சதைக்குப் பதிலாய் உயிர்
மாய்த்திடும்


வழியில் விஷம் கையிலெடுக்க,
விதியை நொந்து


நீ சொன்ன சொல் எல்லாம்
தானே


இன்றைய என்
செல்வங்கள்.




திருமணம் ஆகியும் உன் மனம்
மாறவில்லை.


பணம் பலகண்டும் என்னுடைய
காதல்மனமும்


மாறவில்லை.!


"இன்னமும்
காதலிக்கிறேன்-


உன்னைப் போலவே
நானும்,"


அந்த ஜந்து ருபாய் தாளை
தடவியவண்ணம்.


உன்னை
மணக்காததால்!!


நானோ கல்யாணம் ஆகாத
பிரம்மச்சாரி. நீயோ


மணமாகியும் மங்கலம் சூடிடாத
நெற்றிக்காரி-


திலகம் நான் இடாததால்.




நீ குங்குமம் சூடிடாதற்கு மதம்
காரணமாம்.


நான் மணம் கொள்ளாதற்கு ஜாதகம்
காரணமாம்.


காதலை அறியாத
அறிவாளிகளுக்கு.