Search This Blog

Saturday, January 06, 2007



உள்ளத்தின்அலைகளாக எண்ணங்களை ஏற்படுத்துகிறாயே
இடைவிடாது நீ! என்ன கண்ணில் காணமுடியாத கடலா?
இல்லை என்னுள் இறக்கைகொண்ட இன்னொருவனா?

கூடாது!! என கூறியதை சிந்திக்காமல் செய்யதூண்டுகிறாயே!
நீஎன்ன மேதையா? இல்லை மேதாவியா?
உண்மையில் உன் உருவம் தான் என்னவோ?

உன்னை அடக்கி வைக்க எண்ணிய என்னI
அறுபதுநொடிகள் அலைகழித்து‍‍‍‍ அடங்கி
அமைதியாகி ஏங்கவைக்கிறாயே என்னை!
உன் எண்ணஅலைகளுக்காக‌!!

நீ என்ன பாசமலரா? இல்லை!
பாசங்கு செய்யும் பகலவனா?
உனக்கு இல்லையோ? உலகின் மீது வெறுப்பு!!
அனைத்தையும் அடைய ஆசை கொள்கிறாயே.
முடியாது போனால்அழசெய்கிறாயே என்னை.

நீ என்ன என்னுள் உண்டாகிய‌ உள்ள ஊற்றா?
,உசுப்பேற்றிடிடும்உறவா? இல்லை உளவாளியா?
மலைதாண்டிபறக்க செய்கிறாய்.
பாலையிலும் பானகம் தருகிறாய்.

பதில் கேட்டால் மட்டும் மனமே !!
மெளனம் கொள்கிறாயே!! ஏன்?
உன்னை குரங்கு எனச்சொல்லி குரங்காட்டியாய்
இருக்கச் சொன்னோர் ஏராளம். ஆனால்
நீ தானே ஏவுகிறாய் எல்லோரையும்
எல்லா செயலுக்கும்.

நீ என்ன மனிதனை மறைந்திருந்து
வேலை வாங்கும் முதலாளியா? இல்லை
முந்திச்செல்லும்முதல்வனா?

மனமே மெளனம் இன்றி என் இறைச்சல் அடக்கிடு.

No comments: