
அம்மாவின் ஆணைக்கு அடங்கிடாத நான் அவசரக்காரன் என்றானேன்
அப்பாவுக்கும் அடங்கிடாத நான் அடங்காப்பிடாரி என்றானேன்
ஆசானுக்கும் அடங்கிடாத நான் ஆத்திரக்காரன் என்றானேன்
கடவுளுக்கும் அடங்கிடாத நான் நாத்தீகன் என்றானேன்
ஊர்மக்களுக்கும் அடங்கிடாத நான் முரடன் என்றானேன்
உன்னிடம் அடங்காததால் மட்டும் உனக்கு காதலன் ஆனேனே!
எதற்கும்!ஏன் உனக்கே அடங்கிடாத நான் அந்த
ஓர் வார்த்தையில் அடங்கிவிட்டேனடி.
No comments:
Post a Comment