
தனக்காவும் தன்மனைக்காவும் மக்களை மடியசெய்யும் சுயநலவாதிகள்,
மந்திரிகளாகி மதப்பிரச்சனையைத் தூண்டும் மந்திரவாதிகள்,
தலைமகன்என சொல்லி தலைபல வாங்கி மலையாய்
செல்வம் சேர்க்கும் கயவாளிகள்,
சமயம் பார்த்து சாதியை வைத்து சண்டை தூண்டும் சந்தர்ப்பவாதிகள்,
காலில் விழும்போதும்,கையெடுத்து வணங்கும் போதும்,
காலை வாரிவிடவும்-கையை வாங்கிடவும்,
வஞ்சம் செய்யும் நெஞ்சுண்ட கயவாளிகள்.
குற்றம் பலசெய்தாலும் சட்டங்கள் பல வந்தாலும்
செளகர்யம் குறையாமல் சதுரங்கம்ஆடும் அகப்படாத ஆயுள்கைதிகள்.
அறிக்கைகள் பல அறிவித்து ஆசைதனைதூண்டிவித்து
துன்பப்படுவோரின் வயிற்றில் அடிக்கும்ஆக்கிரமஜாதியினர்.
தினந்தோறும் பூச்சு இன்றி புன்முறுவலோடு பலபல வேடம்
போடும் பெரும் நாடக கூட்டத்தினர்கள். இதை அறிந்தும்
மனம் வருந்தியும் மனம்மாறி குமுறுதல் மனித இயல்பு.அந்த மனதை மாற்றிடல் சாத்தியமானது எப்படி என்பதை அறிந்த அராஜகவாதிகள்.
சலவைநோட்டுக்களால் சண்டைக்காரனையும் சாட்சிகாரனாக்கிடும்
சாதூர்யவாதிகள்.இவனின் சுயரூபம் கண்டும் தெரிந்தும்-
தேர்தலுக்கு முன் கிடைக்கும் சில மதிய உணவுடன் கூடிய, மாமிசதுண்டுகளுக்கு நன்றி மறக்காத மனிதமனம் தான்அவர்களின் மந்திரக்கோலோ?இல்லை அவன் ஆட்சி செய்யும் அமைச்சரவையோ?அவனையே அழைக்கின்றனறே அதிக ஓட்டுக்கள் இட்டு.இப்படியும் ஒரு வித்தியாசமானவிந்தையா!! இல்லையில்லை .இதுதான் இன்றைய இந்தியா.
No comments:
Post a Comment