
சிறகில்லா பறவைகளா? காற்றும் கனவும்
இவைகள் கட்டுபாடின்றி செல்கின்றனவே.
பண வலுவில்லாதவனை கனவும்,
மன வலுவில்லாதவனை காற்றும்,
வின்னில் பறக்க வைக்கும் விந்தைகள் ஏனோ?
இவற்றை வெறுத்தோர் வெளிநாட்டிலும் இல்லையாமே!
இவைகளை பார்த்தவர்கள் பாரினிலேது-
இவைகளை உணராதவர்கள் உலகினிலேது.
காதலுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் எவ்வளவோ?
அளவில் அடங்கவில்லையே.
நீங்கள் கொண்டு வந்த வரம்தான் என்னவோ?
காதலை வாழவைக்கவா?இல்லை இக்கவியை வரவழைக்கவா?
காதலித்து பிரிந்தோரா? இல்லை இறைவனுக்கு
பிறந்த இரட்டைகுழந்தைகளா?உண்மையில்
உங்களின்உறவு தான் என்ன? கனவே!நீயே
இதற்கும் பதில் சொல்லிடு.உன் வரவுக்காக உறக்கத்தில் விழித்திருக்கிறேன்.கேள்வியோடு
No comments:
Post a Comment