
ஆயிரம் அழகிகள் அரைகுறையாய்
அலைகளுக்காக ஏங்கி, ஓடி ஓடித் தேடிட-
உன் ஒருத்தி வரவில் மட்டும்,
சுனாமியாய் அலைகள் பொங்கி கரை வந்து,
உனக்கு பாத பூசை செய்து
கண்ணீர் விட்டு கரைந்து செல்கின்றனவே.
ஏன்?என கடல் உற்று நோக்கினேன் வெகுநேரம்.
கண்ணீர் சிந்தியது கண்கள்-
வெகுநேரம் உற்று நோக்கியதால்.
ஓ!என்போல உன்னை காதலித்தவர்களின்
சிந்தனைத் துளிகள்தான் கடல்நீரானதோ.
இந்த துளிகள், சிந்தனைத்துளிகள் அல்ல,
என் கண்ணீர்த் துளிகள்.
கடலில் கலந்திடவிடாதே.
நானும் கரைந்து விடுவேன்.
No comments:
Post a Comment